கலை இலக்கிய இதழான செம்மலரை தமிழகம் முழுவதும் கொண்டு செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் மோகன். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் செம்மலர் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக கட்சித் தோழர்களின் திருமண விழாக்கள், கருத்தரங்கங்கள், கலை இலக்கிய நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அங்கு மோகனை செம்மலர் மாத இதழுடன் பார்க்க முடியும். தற்போது இவர் தமிழகம் முழுவதும் அறிந்த “செம்மலர் மோகனாக” வலம் வருகிறார். கொரோனா காலத்திற்கு முன்பு அதிகபட்சமாக தனிநபராக 2,300 செம்மலர் விற்று சாதனை படைத்துள்ளார். கொரோனா காலம் முடிந்த நிலையில் மீண்டும் செம்மலர் விற்பனையை தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக 225 செம்மலர் விற்று வந்துள்ளார். ஏப்ரல் இதழை 700 பெற்று விற்பனையில் ஈடுபட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் 23ஆவது மாநில மாநாட்டிலும் செம்மலர் விற்பனை செய்தார். பலர் நாங்கள் சந்தாதாரர் என்றாலும், “பரவாயில்லை, இதழை வாங்கி வேறு யாருக்காவது இலவசமாகக் கொடுங்கள்!” என்று நயமாகப் பேசி செம்மலரின் வளர்ச்சிக்கு உதவுகிறார் மோகன்.
செய்தி, படங்கள்
வே.தூயவன், இலமு, ச.நல்லேந்திரன்,
ச.லெனின், ஜெ.பொன்மாறன், ப.ரணதிவே,
ஜெ. பார்த்தசாரதி