tamilnadu

img

மாமேதை காரல் மார்க்சுக்கு தமிழ்நாடு அரசு சிலை வைக்கும்

சென்னை, ஆக. 13 - மாமேதை காரல் மார்க்சுக்கு சென்னையில் தமிழ்நாடு அரசே சிலையை நிறுவும் என்று நம்புவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். மாமேதை காரல் மார்க்சுக்கு சென்னையில் சிலை வைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன்,விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கடிதம், மனு வாயிலாக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் இதனை நினை வூட்டும் வகையில மாமேதை காரல் மார்க்ஸ் அஞ்சல் தலை வெளியீட்டு விழா சனிக்கிழமையன்று (ஆக.12) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை மாமேதை காரல் மார்க்ஸ் சிலைக்குழு நடத்தியது. காரல் மார்க்சின் சிலைக்கான மாதிரி உருவப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக் கண்ணு திறந்து வைத்தார். அஞ்சல் தலையை வெளியிட்டு விசிக தலை வர் தொல்.திருமாவளவன் பேசுகை யில், சென்னையில் காரல் மார்க்ஸ்  சிலை வைக்க கோரி முதலமைச்சரிடம் மனு அளித்தோம். அதன்படி, அரசுக்கு  சொந்தமான இடத்தில் முதலமைச்சர் சிலையை வைப்பார் என்று நம்பு கிறோம் என்றார்.

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத் கரியம் அனைத்தும் சமத்துவம் என்ற இலக்கை கொண்டது. மனிதனின் உழைப்பை சுரண்டக்கூடாது என்பது தான் மார்க்சியம். வலுவாக உள்ள வர்கள் ஆதிக்கம் செலுத்தி சுரண்டல், தாக்குதல் போன்றவற்றில் ஈடுபடு கின்றனர்; ஆளும் இடத்திலும் உள்ள னர். சுரண்டல், ஒடுக்குமுறை மனித குலத்திற்கு எதிரானது. சனாதானத்தை இந்திய மண்ணில் எதிர்ப்பவர்கள் மார்க்சியம்வாதிகள்தான் என்றும் அவர்  கூறினார். மார்க்சியத்தை உள்வாங்காமல் பெரியாரியம், அம்பேத்கரியம், சன தானத்தை எதிர்த்து வலுவாக போராட முடியாது. ஆட்சிப் பொறுப்பில் உள்ள வர்கள், பெரியாரியம், அம்பேத்கரி யம், மார்க்சியத்தை அழிக்க முயற்சிக்கி றார்கள். காங்கிரஸ் கட்சியை மட்டும் பாஜக விமர்சிக்கவில்லை. இடது சாரிகளை அழிக்க நினைக்கிறது. இதற்கெதிரான ‘இந்தியா’ கூட்டணி, இடதுசாரி அணி வலதுசாரிகளை விரட்டுவது என்ற ஒற்றை இலக்கோடு  செயல்படும் என்றார். இந்த நிகழ்விற்கு பேரா.அ.மார்க்ஸ் தலைமை தாங்கினார். தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மு.வீர பாண்டியன், யுசிபிஐ மாநிலச் செய லாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடு தலை மாநிலச் செயலாளர் ஆசைத் தம்பி, திராவிடர் விடுதலை கழக தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகரன், அமைப்புசாரா தொழி லாளர் கூட்டமைப்பு தேசியச் செய லாளர் இரா.கீதா, மனிதி செல்வி உள்ளிட்டோர் பேசினர்.