சேலம், டிச.28- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பெரும் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மலைக்குறவன் மக்களுக்கு இனச்சான்று வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முல்லை வாடி, தமையனூர், தலைவாசல், துலுக்கனூர், அம்மன்பாளையம் உள்ளிட்ட 32 கிராமங்களில் மலைக் குறவன் சமூக மக்கள் வசித்து வருகின்ற னர். மக்களுக்கு இனச்சான்று வழங்கக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட மலைக் குறவன் முன்னேற்ற சங்கம் இணைந்து கடந்த 5 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதையடுத்து மலை வாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அரசின் முதன்மை கூடுதல் செய லாளர் தென்காசி ஜவகரைச் சந்தித்து மனு அளித்தார். மலைக்குறவன் மக்களுக்கு மலை வாழ் மக்கள் என சான்றிதழ் வழங்க வேண்டும்;
குறிப்பாக, பெற்றோருக்கு மலைவாழ் மக்கள் சான்றிதழ் இருந் தால், அவர்களின் குழந்தைகளுக்கும், குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு மலைவாழ் மக்கள் சான்றிதழ் இருந் தால் அவர்களுக்கும் அதேபோல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. இதைத்தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக 10 பேருக்கு இனச்சான்றுகளை ஆத்தூர் கோட்டாட்சியர் வழங்கினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாண வர்களுக்கு இனச்சான்று கேட்டு விண்ணப்பம் கொடுத்த நிலையில், தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள் ளது. இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு காத்திருப்பு போராட்டத்தை மலை வாழ் மக்கள் சங்கம் நடத்தி தான் இனச் சான்று வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இப்போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு, மாநிலப் பொருளாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை.சண் முகராஜா, ஆத்தூர் ஒன்றிய செயலா ளர் ஏ.முருகேசன், சேலம் மாவட்ட மலைக்குறவன் முன்னேற்ற சங்க நிர்வாகி ஏ.வி.சண்முகம் உட்பட பள்ளி மாணவர்கள், அப்பகுதி மக்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.