சென்னை, ஜன. 2 - தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை 600 என்று குறைந்திருந்த நிலையில் திடீரென பரவல்வேகம் அதிகரித்துள்ளது. தொற்று பரவலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக அளவில் பரவி வருகிறது. இதன்படி சென்னையில் கடந்த 10 நாட்களை ஒப்பிடும்போது தொற்றுப்பரவல் 250 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 18ந் தேதி 125 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் டிச.29ந் தேதி 294 ஆகவும், உயர்ந்தது. ஜன.1 அன்று இந்த எண்ணிக்கை 682 ஆக உயர்ந்துள்ளது.