tamilnadu

உலகச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பலை உடனே விடு விக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபை பாது காப்பு கவுன்சிலின் கோரிக்கையை ஏமன் நிராகரித்துள் ளது. ஏமன் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹூசைன் அல் அசி,“நாங்கள் கைப்பற்றி வைத்துள்ள கப்பல் பேரீச்சம் பழங் களையும், பொம்மைகளையும் ஏற்றிக் கொண்டு செல்ல வில்லை. அதற்குப் பதிலாக ஆயுதங்கள் நிறைந்த கப்பலாக அது உள்ளது. தீவிரவாத அமைப்புகளுக்கு அந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டவையாகும்” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் துனீஷி யாவில் வலுத்துள்ளன. அதிகாரத்தை முழுமையாக அவர் கைப்பற்றிக் கொண்டுவிட்டார் என்றும், மீண்டும் ஜனநாயகத்தை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். குறிப் பாகத் தலைநகர் துனிஸ் போராட்டக் களமாக மாறியுள் ளது. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர்ப் பீரங்கி களை மீறி ஆயிரக்கணக்கில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். ஜனாதிபதியின் “கலகம்” விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாஹூ தன் மீதான ஊழல் வழக்கிலிருந்து தப்பிப்ப தற்காக பேரம் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் அரசியலில் இருந்து வெளியேறிக் கொள்வதாகவும், அதற்குப் பதிலாக தன் மீதான ஊழல் வழக்கை மேலும் எடுத்துச் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது சட்டத்தை மீறுவதாகும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.