மதுரை, ஜன.9- பொங்கல் பண்டிகைக் காகக் கொடுக்க வைத்தி ருந்த இலவச வேஷ்டி- சேலைகள் தீயில் எரிந்தது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்தநிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் திங்களன்று காலை ஒரு மணி யளவில் தீ விபத்து ஏற்பட் டது. இதுகுறித்துத் தகவல் அறிந்து ஐந்து வாகனங்க ளில் வந்த தீயணைப்பு மற் றும் மீட்புத்துறையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பொங்கல் பண்டிகைக்காகப் பொதுமக்களுக்குக் கொடுக்க வேண்டிய 29,232 சேலை, 12,500 வேஷ்டிகள் தீயில் எரிந்து சேதமானது.