tamilnadu

ஃபாக்ஸ்கான் ஆலை இன்று திறப்பு

காஞ்சிபுரம்,ஜன.11- காஞ்சிபுரம் மாவட்டம் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக தொழிற்சாலை சார்பில் தற்காலிகமாக விடுமுறை அறி விக்கப்பட்டது. மீண்டும் வேலை வழங்குகிற வரையில் சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகம் உறுதி செய்தது தற்போது ஜன.12 அன்று ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று அரசு  செய்திக் குறிப்பு கூறுகிறது. அரசின் அறிவிப்பில்  1000 பேர் வரையில் மட்டுமே வேலை வழங்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலையில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்குவது சம்பந்தமான எந்த குறிப்பும் இல்லை. இதுகுறித்து சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-  வேலை மறுக்கப்படும் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் வரை சம்பளம் வழங்கப்படும் என்பது  குறித்த அறிவிப்புகளும் இல்லை.

மேலும் ஒரு தொழிற்சாலை யில் அரசின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிற அரசின் வழிகாட்டுதல் நம்பிக்கை அளிக்கக் கூடிய வார்த்தைகள்தான். அதே நேரத்தில் அரசின் வழிகாட்டுதல் என்று  சொல்லக்கூடிய தொழிற்சாலை சட்டத்தின் அடிப்படையில் அங்கு பணிபுரிந்த இரண்டு வருடங்களுக்கு மேலான  தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்பதும் தகுதியானவர்கள் அனைவரும் நிரந்தர தொழி லாளர்களாக அமர்த்தப்பட வேண்டும் என்கிற தொழிற்சாலை சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து  எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து ஃபாக்ஸ்கான்  உற்பத்திக்கான தனது பிரிவை  விரிவாக்கம் செய்யும் என்கிற அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில், 2015 ஆம் ஆண்டு மூடப்பட்ட ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று ஃபாக்ஸ்கான் நிர்வாகம் அரசின் முன்பு ஒப்புக்கொண்ட அடிப்படையில் அவர்களுக்கு வேலை கிடைக்கவும் மாவட்ட  ஆட்சி நிர்வாகம் தலையிட வேண்டும்

என கேட்டுக் கொள்கிறோம் . தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் அவர்கள் எங்குதங்க  வேண்டும் என்பது குறித்த உரிமைகள் தொழிலாளர்கள் நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும் அவர்கள் தங்கும் உரிமை யில் நிர்வாகம் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தொழிலாளர் பிரச்சனையில் ஃபாக்ஸ்கானின் முந்தைய பழைய நிலை தொடருமானால்  தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான தனது போராட்டத்தை சிஐடியு முன்னெடுக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.