சென்னை, மார்ச் 23- தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுமா? என்று உறுப்பினர்கள் பலரும் வினவினார். இதற்கு பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,“ தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்”என்றார்.