திருப்பூர், மார்ச் 1- திருப்பூர் ஜெ.பி.நகர் பகுதியில் திங்களன்று விநியோ கம் செய்யப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது. அத்துடன் அந்த நீரில் புழுக்கள் இருந்ததாக பொது மக் கள் குற்றஞ்சாட்டினர். திருப்பூர் மாநகராட்சி 17ஆவது வார்டுக்கு உட்பட்ட ஜெ.பி.நகர் பகுதியில் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, நீண்ட நாட்களாக இப்பிரச்சனை நீடிக்கிறது. கடந்த இரு மாதங்களாக இப்பிரச்சனை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென் றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எஸ்.நகர் கிளை செயலாளர் இ.பி.ஜெய கிருஷ்ணன் கூறினார். இந்நிலையில் திங்களன்று கழிவு நீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் அந்த தண்ணீரை சேமித்து வைத்து சம்பவ இடத்துக்கு அதிகாரி களை அழைத்தனர். அங்கு வந்து பார்வையிட்ட மாநக ராட்சி அலுவலர்கள் குடிநீரில் சாக்கடை கலப்பதை ஆய்வு செய்து, அதை சரி செய்து சுத்தமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துச் சென்றனர்.