சென்னை,மார்ச் 21- தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களை தடுப்பதே அரசின் முதன்மையான இலக்கு என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்க ளன்று(மார்ச் 21) கேள்வி நேரத்தின்போது,“ தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்க உரிய வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா?” என்று சேலம் தெற்கு தொகுதி பாமக உறுப்பினர் அருள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் ,“சாலை விபத்துகள் எண்ணிக்கை அதி கரித்துக் கொண்டிருப்பது கவலை அளிக் கிறது. சாலைகளில் மக்களுக்கு பாது காப்பான பயணத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது அரசின் முதன்மையான இலக்காகும்.. அதற்காகத்தான், எனது தலைமையில் உயர் மட்டக்குழு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு ,“இன்னுயிர் காப்போம் -நம்மை காக்கும் 48” என்ற உயிர்காக்கும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தை 18.11.2011 அன்று மேல்மரு வத்தூரில் தொடங்கி வைத்தேன். இந்த திட்டத்தால் 18.11.2021 முதல் 18.3.2022 வரை, அரசு மருத்துவமனைகளில் 29,142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும் என மொத்தம் 33, 247 பேர் 48 மணி நேர இலவச சிகிச்சையைப் பெற்றிருக்கி றார்கள். அதாவது, 33 ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்காக, இதுவரை ரூ. 29.56 கோடி செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு, தமிழகத்தின் சாலை பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர்கூட உயிரி ழக்கக்கூடாது என்பதையும், உறுதி செய்யக் கூடிய உயரிய நோக்கத்தோடு அரசு இனிவரும் காலங்களில் தீவிரமாக செயல்படும் என்றார்.