சென்னை,பிப்.4- மலைகளின் அரசி என்று அழைக் கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பூண்டு, பீன்ஸ் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மாநி லத்தின் பெரும்பான்மையான தேவை யை ஈடு செய்யும் வகையில் பிற மாநி லங்களில் இருந்தும் பூண்டு இறக்கு மதி செய்யப்படுகிறது. பூண்டு அறுவடை காலம் தொடங்கி விட்ட நிலையில் வழக்கத்துக்கு மாறாக, சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டு ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப் படுகிறது குப்பையில் கொட்டப்படும் பூக்கள் பூக்களின் விலை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் குப்பையில் கொட் டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரி வித்தனர். சரியான விற்பனை இல்லாததால் தினந்தோறும் 10 டன் பூக்கள் குப்பை யில் கொட்டப்படுகிறது. மல்லி கடந்த வாரம் 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 700 ரூபாய் குறைந்து 800 ரூபாய்க்கு ஞாயிற்றுக்கிழமை (பிப். 4) விற்பனை செய்யப்பட்டது. சம்பங்கி 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் 20 ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பன்னீர் ரோஸ் 50 ரூபாய்க்கு விற்பனை செய்ய ப்பட்டு வந்த நிலையில் 30 ரூபாய் குறைந்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.