திருவண்ணாமலை,பிப்.16- திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் சமீபத்தில் வடமாநில கும்பல் ஒன்று பணபட்டுவாடா இயந்திரங்களை உடைத்து கொள்ளையடித்துச்சென்றது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை நெருங்கி விட்டதாக தமிழ்நாடு காவல்துறையினர் தெரிவித்துள்ள னர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடத்திய தேடு தல் வேட்டையில், அரியானா வாலிபர் ஒருவரை காவல்துறையி னர் வியாழனன்று(பிப்.16) கைது செய்தனர். மேலும், கொள்ளையர் கள் அனைவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதுகுறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் வியாழனன்று (பிப்.16) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டகுற்றவாளிகள் குறித்து அறிவியல் பூர்வமாக தடயங்களின் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கே. ஜி. எஃப். பகுதி யிலும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான மற்றொரு குழுவினர் குஜராத் மாநிலம் வதோத்ராவிலும், திரு வண்ணாமலை காவல் கண்காணிப் பாளர் கார்த்திகேயன் தலைமை யிலான மூன்றாவது குழு அரியானா மாநிலத்திலும் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட ஆரிப் என்ற அரியானா வாலிபர் பெங்களூர் கே.ஜி.எப்.பில் கைது செய்யப் பட்டுள்ளார். அவருக்கு விடுதியில் தங்க அறை கொடுத்த மேலாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. திரு வண்ணாமலையில் ஏடிஎம்களை கொள்ளை கும்பல் முன்கூட்டியே வந்து உளவு பார்த்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இங்கு கொள்ளையடித்து விட்டு பெங்களூர் சென்று விமானம் மூலம் அரியானா சென்றுள்ளனர். இது தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த 2 பேர், அரியானாவை சேர்ந்த 2 பேர், குஜராத்தை சேர்ந்த 6 பேர் என 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொள்ளையில் ஈடு பட்டது அரியானா கும்பல் தான். மற்ற மாநிலத்தவர்கள் அவர்க ளுக்கு உதவியுள்ளனர். அரியானா காவல்துறை உதவியுடன் கொள்ளை கும்பலை நெருங்கி விட்டோம். விரைவில் பிடிபடுவார் ்கள். இவ்வாறு அவர் கூறினார்.