தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்
“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று மிரட்டல் விடுக்கும் ஒன்றிய அரசின் தடித் தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டா லின் தனது சமூகவலைதளப் பக்கத் தில், “அவர்கள் இந்திய அரசியல மைப்பின் விதிமுறைகளுக்குள் வர வேண்டும் (They have to come to the terms of the Indian Constitution) என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை ‘சட்டத்தின் விதி’ (rule of law) என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கு கிறது எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்; ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி; அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல.
“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று அச்சுறுத்தும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட் கிறோம். உங்கள் தனிச் சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் தில்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநில அரசுக்கு நெருக்கடி தமிழக பள்ளிக் கல்வித் துறை யின்கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது. ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் (எஸ்எஸ்ஏ) இந்த நிதியுதவி தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற் காக ஆண்டு தோறும் ஒன்றிய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சத வீதம் என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது. அதேநேரம், இந்த நிதியை பெற ஒன்றிய அரசின் விரி வான கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் விதிகளை மாநில அரசுகள் அவசியம் பின்பற்ற வேண்டும். இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு எஸ்எஸ்ஏ நிதியை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு முதல் நிறுத்திவிட்டது.
அந்த வகையில், நிதி ரூ.2,152 கோடியும் ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், உத்தரப் பிர தேசம் மாநிலம் வாராணசியில் நடை பெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார். அப்போது அவ ரிடம் தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது தொடர்பாக கேட்ட போது, “தேசிய கல்விக் கொள் கையை ஏற்க தமிழக அரசு மறுக் கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது” என்றார். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரி விக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.