tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. சென்னையில் நடை பெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி யின் தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்  ராஜேஷ் குமார் நேரில் அழைப்பிதழ் கொடுத் தார்.
  2. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு இல வச பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னையை மையமாக கொண்டு இயங்கும் சங்கர் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.1 கோடியே 67 லட்சம் ரூபாய் (1,67,64,700) விடுவிக்கப்படுவதாக ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சகம் அறிவிப்பு. 
  3. ஸ்டெர்லைட் ஆலை யின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக் கில் வேதாந்தா நிறுவன விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை செயலர்  பரி சீலித்து 3 மாதத்தில் உரிய முடிவெடுக்க உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவு.
  4. கனியாமூர் பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு  விசாரணையை தொடங்கியது. டிஐஜி பிரவின் குமார் அபினவ் மற்றும் குழுவில் உள்ள எஸ்.பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விசார ணையை தொடங்கினர்.
  5. வெள்ளியன்று நடை பெறும் ஆணைய கூட்டத் தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கப்படாது என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு. தமிழ்நாட்டின் கோரிக் கையை ஏற்று மேக தாது குறித்து விவாதிக்  கக் கூடாது என உச்சநீதி மன்றம் உத்தர விட்டிருந்தது.
  6. நிதி ஆயோக் வெளி யிட்டுள்ள “புதிய கண்டு பிடிப்புகளுக்கான குறியீடு 2021” பட்டி யலில் தமிழ்நாட்டிற்கு 5ஆவது இடம். கர்நாடகா முதலிடத்திலும், தெலுங் கானா 2ஆவது இடத்தி லும், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா 3 மற்றும் 4ஆவது இடத்தை பிடித்துள்ளது.
  7. நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்து வதை கண்டித்து தில்லி, சண்டிகர், தெலுங்கானா ஆகிய இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் வாக னங்களுக்கு தீ வைப்பு  உள்ளிட்ட வன்முறை நிக ழ்வுகளும் அரங்கேறின.
  8. விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்ச னைகளை பற்றி விவா திக்க அனுமதி மறுக்கப் பட்டதால் மக்களவை யில் இருந்து திமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.