tamilnadu

தொகுப்பு வீட்டின் மேற்கூரை விழுந்ததில் முதியவர் பலி

திருவள்ளூர், டிச 29- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பணப்பாக்கம் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான சாமிநாதன் (70).  அவரது தொகுப்பு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, வீட்டின் மேற் கூரையின் மேல் பூச்சு பெயர்ந்து விழுந்து   உயிரிழந்ததார். இதனைத் தொடர்ந்து முதியவர் சாமிநாதனின் சடலத்தை கைப்பற்றிய திருப்பாலைவனம் காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தொகுப்பு வீட்டை  நேரில் ஆய்வு செய்தார்.  20க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள்  சிதிலமடைந்துள்ள நிலையில் அவை வாழ தகுதியற்ற நிலையில் இருப்பதாககூறினார். அந்த வீடுகளில் வசிக்கும்  மக்களுக்கு  மாற்று வீடுகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று மாற்று ஏற்பாடாக புதிய வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.