tamilnadu

ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து பிப்.28 பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப்.15- சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை வருமாறு: நாடாளுமன்றத்தில் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கும், பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சிறு-குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுப்பதற்கும், உற்பத்தி சேவை மற்றும் நிதித்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவதற்குமான எந்தவித உருப்படி யான திட்டத்தையும் இந்த நிதிநிலை அறிக்கை பிரதிபலிக்கவில்லை.

நிதி ஒதுக்கீடு வெட்டு

வேலை இழப்பும் - அதனால் ஏற்பட்டிருக்கும் வருமானமிழப்பும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களின் வாழ்நிலையை மிக மோசமாக சீர்குலைத்துள்ளது. கிராமப்புற வேலையின்மை பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டதிற்கான நிதியை ரூ.73 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளது. அதாவது 2021-22ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 98 ஆயிரம் கோடியிலிருந்து 25 ஆயிரம் கோடி குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பதிவு செய்து வேலை அட்டை பெற்றுள்ள திட்டத்தின் பயனாளிகளுக்கு முழு மையாக வேலை அளித்திட 2.64 லட்சம் கோடி  ஒதுக்கிட வேண்டிய நிலையில், ஏறக்குறைய 2 லட்சம் கோடி மொத்தத்தில் குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் நடவ டிக்கை என்பதுடன் பசி பட்டினியை மேலும் அதிகரிக்கவே வழிகோலும்.

கொள்முதல்- நிதி ஒதுக்கீடு  கடும் வீழ்ச்சி

விவசாயிகளின் துயரங்களுக்குத் தீர்வை சொல்லாமல் மீண்டும் ஒரு முறை விவசாயிக ளுக்கு நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை தந்துள் ளது. 2022ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வரு மானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று கடந்த கால வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் துளியும் இல்லை. கானல் நீராக கரைந்து போனது. விவ சாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை (எம்.எஸ்.பி) தீர்மானிப்பதற்கு போதிய நிதி ஒதுக்கீட்டை செய்யவில்லை. நெல், கோதுமை கொள்முத லுக்காக கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் - தற்போதைய பட்ஜெட்டில் 11 ஆயிரம் கோடி குறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, எரிபொருள் மற்றும் உரம் உள்ளிட்ட முக்கிய அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியங்களும் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீ டும் குறைக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடுக ளும் குறைக்கப்பட்டுள்ளன.  அதேநேரத்தில்  கார்ப்பரேட் வரியினை  கணிசமாக குறைத்து கார்ப்பரேட்டுகளின் லாபங்களை  பெருமளவு திரட்டிக்கொள்ளவும், குவித்துக்  கொள்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள் ளது. ஜிஎஸ்டி மூலமாகவும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கடுமையான மறைமுக  வரிகளை மக்கள் தலையில் சுமத்தியதன் மூல மாகவும் அரசின் வருவாய் அதிகரிக்கப் பட்டுள்ளது.   

மானியங்கள் கடும் வெட்டு

விவசாயிகளுக்கான அனைத்து மிகப் பெரிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெரிய அள விற்கு வெட்டப்பட்டுள்ளன. மத்திய உணவுக்கிடங்கிற்கான விளை பொருள் கொள்முதலுக்கான நிதி 28 சதவீதம் அளவிற்கு கடுமையாக வெட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை சட்டப்பூர்வ மாக உத்தரவாதம் செய்யுங்கள் என்று பெரும் போராட்டங்கள் நடத்தி வரும் வேளையில் இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. உர மானியம் 25 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது. பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் 12.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ. 6 ஆயிரம் அளிப்பதாகக் கூறப்பட்ட திட்டத் திற்கு உண்மை மதிப்பீடுகளின் அடிப்படையில் ரூ.75 ஆயிரம் கோடி  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் ரூ.68 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக் கப்பட்டுள்ளது. பயிர் இன்சூரன்ஸ் திட்டத்திற் கான நிதி ஒதுக்கீட்டில் 500 கோடி ரூபாயை வெட்டிவிட்டார்கள். கடந்த 2 ஆண்டுகளில் சமையல்  எரிவாயு மானியம் பெரிய அள விற்கு வெட்டப்பட்டுள்ளது. கடந்த  ஆண்டு இதற்கான மானிய ஒதுக்கீடு 60 சதவீதம் அளவிற்கு வெட்டப் பட்டது. இந்நிலையில் 2022-23 பட்ஜெட்டிலும் மற்றுமொரு 60 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது. 

முறைசாரா தொழிலாளர்க்கு  எதுவும் இல்லை

இந்த நிதிநிலை அறிக்கையில் முறைசாராத் தொழிலாளர்களுக்கென எந்த நிதி ஒதுக்கீடும் புதிதாக இல்லை. இ-ஷ்ரம் எனும் இணைய தளத்தின் மூலமாக முறைசாராத் தொழிலா ளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கான சிறப்பு நிதி எதுவும் இல்லை.  ஒன்றிய அரசின் இந்த நிதிநிலையானது கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து பிரிவு  மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி யுள்ளது.

மார்ச் 28, 29, வேலைநிறுத்தம்

 இத்தாக்குதலை எதிர்கொண்டு ஆட்சியா ளர்களின் கொள்கைகளை பின்னுக்கு தள்ளக் கூடிய வகையில் இந்திய தொழிலாளி வர்க்கம் மார்ச் 28, 29 தேதிகளில் நாடு தழுவிய பொது  வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. இந்த பின்னணியில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து சிஐடியு, விவசாயிகள் சங்கம்,விவசாய தொழி லாளர் சங்கம் இணைந்து அகில இந்திய எதிர்ப்பு நாள் கடைபிடிப்பது என்று முடிவு செய்துள்ளன,

அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும்...

தமிழகத்தில் சிஐடியு, தமிழ்நாடு விவசா யிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து பிப்ரவரி 28 அன்று  அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை வெற்றிகரமாக நடத்து வதற்கு மாவட்ட அளவில் கூட்டு கூட்டங்களை நடத்தி திட்டமிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.