நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஏற்பாட்டையே சீர்குலைத்த மோடி அரசு!
மக்களவை சபாநாயகரை விடவும் அதிகாரம் படைத்தது
நாடாளுமன்றத்தில் சபாநாயகரை விட கூட்டு நாடாளுமன்றக்குழு அதிகாரம் கொண்டது என்ற நிலையில், அதனுடைய அதிகாரத்தையும் கூட பறிப்பதாக ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகள் அமைந் துள்ளன என்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் தெரி வித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், இதுதொடர்பாக அவர் பேசியிருப்ப தாவது: மதப் பாகுபாட்டை அரசியல் சாசனம் தடைசெய்திருந்தும் ஒன்றிய அரசு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி வருகிறது. ஏற்கெனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மூலமாக இஸ்லாமியர்களை தனிமைப் படுத்த முயன்றது.
அடுத்ததாக தற்போது, நாடாளுமன்றத்தில் வக்பு திருத்தச் சட்டத் தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கான தேவை என்ன? முஸ்லிம்களை ஒடுக்கு வதையும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதையும் தாண்டி வேறு என்ன நோக்கம் இருக்கிறது? இந்துசமய அறநிலையத்துறையின் அறங்காவலர் குழுவில் இந்துக்கள் அல்லா தவர்கள் உறுப்பினர்களாக இருக்க முடியாது என்ற விதி உள்ளது. பழனி உள்பட கோயி லுக்குச் சொந்தமான கல்லூரிகளில் பிற மதத்தினருக்கு வேலை வாய்ப்பு இல்லை என்ற அளவிற்கு நிலைமை உள்ளது. ஆனால், வக்பு வாரியத்தில் மட்டும் முஸ்லிம் அல்லாதவர்களை உறுப்பினர் களாக நியமிப்போம் என்று ஒன்றிய அரசு கூறு வது எப்படி சரியாகும்? அப்படி திருத்தத்தை வக்பு சட்டத்தில் மோடி அரசு கொண்டு வந்திருப்பது எதற்காக? வக்பு சட்டத்தின்படி, வக்பு நிலங்கள் 6 மாதத்திற்குள் முறையாக பதிவு செய்யப் படாவிட்டால் அவை வக்பு சொத்தாக கருதப் படாது என்ற திருத்தத்தையும் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வருகிறது. இது வக்பு சொத்தை அபகரிக்கும் திட்டம் அல்லாமல் வேறென்ன? தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பலர் கோயில் நிலங்களில் குடியிருப்ப தாகவும், அரசின் வீட்டுவசதி திட்டங்கள் இருந்தும் நிலம் கோயிலுக்கு சொந்தமான தால், அவர்கள் வெளியேற்றப்படும் அச்சத் தில் குடிசைகளிலேயே வாழ்கின்றனர். கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராடும்போது பாஜக எதிர்க்கிறது. அங்கே பாதிக்கப்படும் மக்க ளுக்காக போராட முன்வராத அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வக்பு வாரியச் சட்டத் தில் திருத்தம் கொண்டு வருகிறார்கள். இந்துக் களை உறுப்பினராக்க வேண்டும் என்கிறார்கள். எனவே தான், வக்பு திருத்தச் சட்டத் திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் போரா டினோம். மசோதா கூட்டுக்குழு பரிசீல னைக்கு சென்றது. கூட்டு நாடாளுமன்றக்குழுவானது, நாடாளுமன்றத்தில் சபாநாயகரை விட அதிகாரம் கொண்டது. ஆனால், அதற்குரிய அதிகாரத்துடன் அந்தக் குழு நடத்தப்பட வில்லை.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆட்சே பணைகள், முறையீடுகள் ஏற்கப்பட வில்லை. நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்ற அமைப்பையும், அதன் அதிகாரங்களையும் கூட மோடி அரசு நீர்த்துப் போகச் செய்து உள்ளது. நாடாளுமன்றத்திலும், ஒரே கூட்டத்தொ டரில் 140 பேரை இடைநீக்கம் செய்தது மோடி அரசைத் தவிர வேறு எந்த அரசும் இல்லை. இந்நிலையில், மதுரையில் நடைபெற வுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு சமத்துவம், சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்கான திட்டங் களை விவாதிக்க உள்ளது. கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், போராட்ட உத்தி கள் குறித்து முடிவெடுக்க உள்ளது. அனை வரும் இம்மாநாட்டில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. பேசினார்.