tamilnadu

img

அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரித்த நீதிபதி மதுரைக்கு மாற்றம்

சென்னை, செப். 30- சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் துறை (போர்ட்ஃபோலியோ) வழங்கப்பட்டிருந்தது. திமுகவைச் சேர்ந்த  அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் ஏற்கனவே கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் விடு விக்கப்பட்ட நிலையில், அந்த வழக்குகளை ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்கு களை விசாரணைக்கு எடுத்தார் ஆனந்த் வெங்கடேஷ். இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக். 3 முதல் 3 மாதங்க ளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை  உயர்நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2020, 2021-ஆம் ஆண்டில்  தாக்கலான கனிமம், நில சீர்திருத்தம்,  நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்து தல், சுதந்திர போராட்ட தியாகிகள் தொடர் பான ரிட் மனுக்களை விசாரிக்க நியமிக்கப் பட்டுள்ளார். இனி அடுத்த 3 மாதங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ க்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஜி.ெஜயச்சந்திரன் விசாரிக்கவுள்ளார்.