tamilnadu

img

கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை இந்திய மனசாட்சியின் பத்திரிகை

தீக்கதிரின் 30வது ஆண்டுவிழா மலரில் அன்றைய ஆசிரியர் குழு புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதில் நானும் இருந்தேன் என்பது பெரு மிதம் தருகிறது. 5 ஆண்டுகள் தீக்கதிரில் பணி யாற்றும் நல் வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளில் மிட்டாய் கொடுத்து ஒரு குழந்தை போல் என்னை வரவேற்றனர். அந்த 5 ஆண்டுகளில் அரசியல், அறிவு, எழுத்தை கற்றுக்கொடுத்த வார்ப்பகம் தான் தீக்கதிர்.  எவ்வளவு பெரிய காற்றடித்தாலும், மார்க்சிஸ்ட் கட்சியின் புரட்சிகரத் திசை வழி யாகத்தான் தீக்கதிர் செல்லும்.  இந்த 30 ஆண்டுகளில் ஊடக உலகம் எவ்வளவோ மறிவிட்டது. ஆளும் வர்க்கம் கூறுவது மட்டுமே  செய்தியாகிறது. 1947ல் தொடங்கி இதுவரை இருந்த அனைத்து பிரதமர் நடவடிக்கைகளின் புகைப்படங்களை எடுப்பது இந்திய செய்தி கழகத்தின் (பிஐபி) அரசு ஊழியர்கள். ஆனால் மோடிக்கு இப்போது புகைப்படம் எடுப்பவர்கள் ஒரு  தனியார் நிறுவன ஊழியர்கள். இந்த நாட்டின்  உயரிய பதவியில் உள்ளவரின் முகத்தை எப்படிக் காட்ட வேண்டும் என்பதில் தனி யார் நிறுவனத்தை நம்புவேனே தவிர அரசு நிறுவனத்தை நம்பமாட்டேன் என்கிற உண்மை, ஒரு பக்கம்; அரசையே நம்பமாட்டேன் என்கிற முகம் ஒரு பக்கம்.

வேளாண் சட்டம் வாபஸ் பெற்ற நாள் மிக முக்கியமான நாள். மோடி அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நாள். வாபஸ் வாங்கப் போகிறார்கள்; என்ன சொல்லப்போகிறார்கள் என்று அன்று யோசித்து, கட்சியுடன் பேசி தயாராகி நாடாளுமன்றத்திற்கு போகிறோம். அன்று பிரதமர் ஊடகங்களில் ஒரே ஒரு நிமி டம் பேசுகிறார். எதிர்க்கட்சிகளின் எல்லா விவா தத்திற்கும் பதில் சொல்லவும், விவாதத்தை சந்திக்கவும் தயாராக உள்ளோம் என்று தெரி விக்கிறார். நாடாளுமன்றத்திற்குள் சென்றோம். தொடர்ந்து விவாதமில்லாமல், ‘வாபஸ் பெறும் சட்டம்’ நிறைவேற்றப்ப டுகிறது என்று கூறி நிறைவேற்றினார்கள்.  அதைப் பற்றிய செய்தி அடுத்த நாளில் இந்தியாவில் எந்த பத்திரிகையிலும் வர வில்லை.  மாறாக, ‘நல்ல சட்டத்தை’ விட்டு விட்டதால் இந்திய வேளாண் துறை எவ்வளவு பிரச்சனையை சந்திக்கப் போகிறது என்று தான் பிரதான பத்திரிகைகளில் வந்தது.  ஆனால் வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றதன்  மூலம் இந்திய வேளாண் சமூகத்திற்கு கிடைத்த நன்மையை உரக்கச் சொன்ன பத்திரிகை தீக்கதிர் பத்திரிகை மட்டும் தான். கம்யூனிஸ்ட் கட்சி பத்திரிகை என்பது  இயக்கத்தின் பத்திரிகையல்ல; இந்திய மன சாட்சியின் பத்திரிகை. எங்கள் முதலாளிகளாக இந்தியாவின் தொழிலாளர்களும் நாட்டை நேசிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

தீக்கதிர் வைரவிழாவில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதில் இருந்து