tamilnadu

img

நகைக் கடன் நிபந்தனைகள் முற்றிலும் நியாயமற்றவை!

நகைக் கடன் நிபந்தனைகள் முற்றிலும் நியாயமற்றவை!

சிபிஎம் கடும் கண்டனம்!

சென்னை, மே 23 - நகைக் கடன் வழங்கு வதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகள் முற்றி லும் நியாயமற்றவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்  ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

எளிய மக்கள் நகைக்கடன் பெற முடியாத நிலை

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவிகிதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும், நகை தங்களுடையது தான் என்பதற்கான ஆதாரம் வழங்க வேண்டும், முழுக் கடனையும் அடைத்து திருப்பினால் மட்டுமே நகை மறு அடமானம் வைக்க முடியும் என பல்வேறு புதிய நிபந்தனைகளை விதித்துள் ளது.  இனி பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்களில் ஏழை - எளிய நடுத்தர மக்கள், நகைக் கடன் பெறவே முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த மோசமான நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக்கண்டிக்கிறது.

கொஞ்சமும் நியாயமற்ற நிபந்தனைகள்

இதற்கு முன்பு, தங்க நகையின் மொத்த மதிப்பில் 80 சதவிகிதம் கடன் வழங்கப்பட்ட நிலை யில், ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகளில், அது தற்போது 75 சதவிகிதமாக குறைக்கப் பட்டிருப்பது, ஏழை - எளிய மக்களை வஞ்சிப்பதாகும்.  கடன் கோருபவர்களின் சொந்த நகையா என்பதை தெரிந்து கொள்ள நகை வாங்கிய ரசீது வழங்க வேண்டுமென கூறுவதும் பெரும் பாலான நகைகள் இரண்டு, மூன்று தலைமுறைகளை கடந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் அத்தகைய நகைகளுக்கு ரசீதுகளை தாக்கல் செய்ய வேண்டுமென்பதும் எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும்.  மேலும், அடமானம் வைத்த நகையை முழு மையாக மீட்ட பிறகே மீண்டும் அந்த நகையை அடமானம் வைக்க முடியும் என்ற புதிய நிபந்த னை நகையை மறு அடமானம் வைப்போர் கந்துவட்டிக்காரர்களிடம் தஞ்சம் புகுவதற்கான ஏற்பாட்டை செய்து கொடுக்கிறது. இது கிராமப்புற மக்களையும், ஏழை - எளிய மக்களை யும், விவசாயிகள், சிறு-குறு தொழில்முனை வோர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கொடுமைப்படுத்தும் செயலாகும்.

முதலாளிகளுக்கு சலுகை; ஏழைகளுக்கு வஞ்சனை

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆயிரக்கணக் கான கோடி ரூபாய்களை கடன் வாங்குவதற்கு மொத்தக் கடனில் 10 சதவிகிதத்தை அடமானமாக வங்கிகள் கேட்பது, பல லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை பெருமுதலாளிகள் வாங்கி விட்டு திரும்ப செலுத்தவில்லையென்றால் அவற்றை தள்ளுபடி செய்வது, கடன் வாங்கி விட்டு அவற்றை திரும்ப செலுத்தாத பெருமுதலாளிகளின் பெயர்களை வெளியிட மறுப்பது என்று பல்வேறு வகைகளில் பெருமுதலாளிகளுக்குச் சாதகமாக பொதுச் சொத்துக்களை வாரிக்கொடுக்கும் வங்கிகள் தான் ஏழை - எளிய கிராமப்புற மக்கள் வாங்கும் சிறு அளவிலான நகைக் கடன்களை கட்டுப்படுத்துவதற்கும், நிராகரிப்பதற்குமான செயல்களில் இறங்கியுள்ளன. இது முற்றிலும் நியாயமற்ற அணுகுமுறையாகும். எனவே, ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை உடனடியாக கைவிட வேண்டு மெனவும், ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் நகைக்கடன் வழங்கும் விதிமுறைகளை எளிமை யாக்க ரிசர்வ் வங்கிக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.