தோள்சீலை போராட்ட வரலாற்றை நமது இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோள்சீலை போராட்டத் தின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றுள்ள தமிழ்நாடு - கேரளா - இரண்டு முதல்வர் களும் இந்தியாவில் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்து வருகிறார்கள். பெரியார் பகுத்தறிவை பிரச்சாரம் செய்தார். மனு தர்மத்தையும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடினார். அவரது கடைசி விருப்பமான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நிறைவேற்ற தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி அதற்கான சட்டத்தை கொண்டுவந்தார். சனாதனவாதிகள் கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. கலைஞர் நிறைவேற்றிய சட்டத்தை கேரளத்தில் செயல்படுத்தி 300- க்கும் மேற்பட்ட சாதியினரை அர்ச்சகர் ஆக்கிய பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயனை சாரும். சனாதனத்தின் கொடுமைகளை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் நடந்திருக்கிறது. புத்தர், ராமானுஜர், வள்ளலார் போன்ற ஆன்மீக பெரியவர்கள் தான் - அன்று தேசியமும் அரசியல் கட்சிகளும் தோன்றாத நேரத்தில் களத்தில் இறங்கி போராடினார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் கூறினார்,
‘பிறப்பொக்கம் எல்லா உயிர்க்கும்’ என்று. அந்த தத்துவத்தை காலில் போட்டு மிதித்திருக்கிறது சனாதனம். இன்றைக்கும் சாதிய கொடுமைகள் நடக்கிறது. வேங்கைவயல் கிராமத்தில் குடிக்கிற தண்ணீரில் மலத்தை கலக்கிறார்கள். திருவண்ணாமலையில் ஆண்டவனை வழிபடச் சென்றால் அடித்து விரட்டுகிறார்கள். ஆலயங் களுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். சனாதனவாதிகளின் ஆணிவேரை அறுப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்குத்தான் இந்த இயக்கம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்தி பேசும் வட மாநிலத் தொழிலாளர்களை தாக்குவதாக பிரச்சாரம் செய்து கலவரத்தை உண்டாக்கப் பார்க்கிறார்கள். தமிழ், இந்தி என பிரிக்கும் வேலையை சனாதனவாதிகள் செய்கிறார்கள். எப்போதும் ஒரு வெறுப்பு அரசியலை முன்வைக்கிறார்கள். கலவரத்தைத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்தால், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணா மலை பேசலாமா? உங்களை கைது செய்தால் நாடு கொந்தளித்துவிடுமா?
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையிலிருந்து
எளிய உழைப்பாளிப் பெண்கள் நடத்திய போராட்டம்
உலக வரலாற்றில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றன. உலகத்தில் எங்கெல்லாம் மனிதன் வாழ்கிறானோ அங்கெல்லாம் ஆதிக்க சக்திகள் ஒருவரை ஒருவர் அடக்கி ஆண்டிருக்கிறார்கள். மிகக் கொடிய வன்முறையாளர்கள் அதிகாரத்தை ஏற்றுக் கொண்ட காலகட்டத்திலே, தங்கள் அதிகாரத்தை தொடர்ந்து நிலை நாட்டு வதற்காக பொதுமக்களை கசக்கிப் பிழிந்து பல்வேறு வகைகளில் வரிகளை வசூ லித்து, மக்களுடைய ரத்தத்தை குடித்து அதன் மூலமாக மிகப்பெரிய சாம்ராஜ்யங்களை கட்டி அமைத்தார்கள். உலகத்திலேயே மானத்தை காப்பதற்காக ஒரு போராட்டம் குமரி மாவட்டத்தில் மட்டும் தான் நடந்தது.
அந்த போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள் யார் என்று நீங்கள் வரலாற்றுக்கு உள்ளே நுழைந்து தேடுவீர்கள் என்று சொன்னால் மிகப் பெரிய தலைவர்கள் முன்னின்று அந்த போராட்டத்தை நடத்தவில்லை. மிகப் பெரிய படிப்பாளிகள், செல்வந்தர்கள், உயர்குடியில் பிறந்தவர்கள், மதகுருமார்கள், அவர்களெல்லாம் இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. சாதாரணமான, எளிய பெண்கள், வயல்வெளிகளில் வேலை செய்யக்கூடிய பெண்கள், சமூகத்தின் அடித்தட்டில் உழைக்கின்ற மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய போராட்டம் தான் இந்த தோள்சீலை போராட்டம். இன்று நாம் பெரிய உரிமைகளை, வளர்ச்சிகளை பெற்றுள்ளோம். பாலுக்கும், மின்சாரத்துக்கும் வரி உயர்த்திவிட்டால் போராடுகிறோம். இந்த மண்ணில் தாலிக்கு வரி கட்டினார்கள், மீசைக்கு, தலைப்பாகைக்கு, செருப்புக்கு; இறப்புக்கும், பிறப்புக்கும் வரி கட்டினார்கள். தாய்மையின் புனிதமான அமுத கலசமான மார்பகத்திற்கும் வரி விதித்த சம்பவம் இந்த மண்ணில் மட்டும் தான் நடந்தது. இந்த போராட்டம் 40 ஆண்டுகள் நடந்திருக்கிறது. தமிழ்நாடு முதல்வருக்கு ஒருகோரிக்கை வைக்கிறேன். உலகில் எங்கேயும் மானம் துடைக்க ஒரு போராட்டம் நடக்காத நிலையில் குமரியில் மானம் துடைக்க போராடிய பெண்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும். தில்லியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு நினைவு சின்னம் வைக்கப்பட்டது போன்று குமரி மாவட்டத்தின் தலைநகரத்தில் தோள் சீலை போராட்ட நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆற்றிய உரையிலிருந்து...
சனாதனத்தை வீழ்த்த ஒன்றுபடுவோம்!
சனாதனம் என்ற கருத்தியல் இந்த மண்ணை எவ்வளவு சிதைத்திருக் கிறது என்பதை அறிய தோள்சீலை போராட்ட வரலாறு நமக்கு உதவுகிறது. தற்கால சனாதனத்துக்கு ஓர் அடை யாளம் தான் தமிழ்நாடு ஆளு நர். இவர்கள்தான் சனா தனத்தின் காவலர்களாக இருக்கிறார்கள். கருணாநிதி, பெரியார் நினைவு சமத்துவ புரத்தை கட்டி அமைத்தார். அதே கருத்தை முத்துக்குட்டி சுவாமியான அய்யா வைகுண்டர் சமத்துவ கிணற்றை ஏற்படுத்தி முன் வைத்தார். அய்யா வைகுண்டர் வரலாற்றை பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலைக்கு அய்யா வைகுண்டர் பெயரை சூட்ட வேண்டும். ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகிய இந்த இரண்டு முதல்வர்களும் இணைந்து செயல்படுகிறார்கள். காங்கிரசுடன் நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் சனாதனத்தை வீழ்த்த முடியும்.
வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., ஆற்றிய உரையிலிருந்து
‘போராடியவர்களே மகத்தானவர்கள்’
தோள்சீலை போராட்டத்தை நினைவுகூருவது நிகழ்காலத்துக்கு மிகவும் அவசியமானது. இங்கு தோள்சீலை போராட்டம் நடக்கிற அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் கறுப்பின மக்களும் தங்களது உரிமை களுக்காக போராடினார்கள். பிரெடரிக் டக்ளஸ் என்கிற கறுப்பின தலைவன் மாபெரும் இயக்கத்தை துவக்கினார். அன்றைக்கு அங்கு பெண்கள் கடைச்சரக்கு, அவர்களை கொன்றாலும் பரவாயில்லை என வெள்ளை நீதிமன்றம் கூறியது. அந்த அமைப்புக்கு எதிரான போராட்டத்தில், முதலாளிகள் உற்பத்தி செய்த பொருட்கள் தீயிட்டு கொளுத்தப் பட்டன. பிறகுதான் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, பெண்களை நிர்வாணமாக வைத்து சாட்டையால் அடிக்கக் கூடாது; 12 சாட்டையை 6 ஆக குறைக்க வேண்டும்; அடித்தால் வழியும் ரத்தத்தை துடைக்க பஞ்சு வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை. வரலாற்றில் இப்படி தண்டிக்க ப்பட்டவர்கள் மகத்தான இடத்தில் வைக்கப்பட்டனர். தண்டித்தவர்கள் குற்ற வாளிகளாக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மதங்கள் பல இருக்கலாம். ஆனால் அரசு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்று சிந்தித்தவர்கள் மகத்தானவர்கள். வரலாற்றில் என்றும் இல்லாத நெருக்கடியில் இந்தியா உள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. அதைத் தடுப்பதற்கு சனாதனத்துக்கு எதிரான தோள்சீலை போராட்டம் நமக்கு உத்வேகமளிக்கும்.
சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆற்றிய உரையில் இருந்து...
‘மண்டைக்காட்டு அம்மையை மீட்டுத்தாருங்கள்’
தோள் சீலை போராட்ட 200ஆம் ஆண்டு நினைவு பொதுக்கூட்டம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். அவமானப்படுத்திவிட்டார்கள் என்கிறார்கள். முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சங்கராச் சாரியாரை சந்திக்கச்சென்று தரையில் அமர்ந்து இருந்த போது அவர்களுக்கு அவமானம் ஏற்படவில்லையா? வரலாற்றை நினைவுகூரும் வகையில் நடைபெறும் பொதுக்கூட்டம் அவமானமாகிவிட்டதா? தோள் சீலை போராட்டம் என்பது உணர்வுமிக்க போராட்டம் ஆகும். அந்தப் போராட்டத்தை இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதல்வரிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி யம்மன் கோயிலை சனாதனக் கும்பல் ஆக்கிரமித்து வருகிறது. அவர்கள் நடத்தும் விழாவில், குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை போடு வதில்லை. பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையை அழை த்து வருகிறார்கள். அவர் என்ன ஆன்மிக சொற்பொழிவாளரா? அந்த அழைப்பிதழைப் பார்த்தால் உண்மையான இந்துக்கள் அதிர்ச்சி அடைவார்கள். மண்டைக்காட்டம்மை எங்களது ஆதித்தாய். அது ஒரு நாட்டார் தெய்வம். இன்று சனாதனவாதிகள் ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை மீட்டுத்தாருங்கள்.
சிபிஎம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் ஆற்றிய உரையில் இருந்து..