மதுரை, நவ. 4 - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையால் பட்டம் வாங்க மறுத்த பேராசிரியர்கள் இருவரை, சு.வெங்கடேசன் எம்.பி. நேரில் வாழ்த்து தெரிவித்து, பாராட்டி யுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என். சங்க ரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற் கான கோப்பு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோப்பில் கையெழுத்திட ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி யினர் இப்போது வரை, கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பட்ட மளிப்பு விழாவையே புறக்கணிப்ப தாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். ஆளுநரு க்கு எதிராக கருப்புக் கொடி போராட் டமும் நடைபெற்றது. பேராசிரியர்களான சோ.சுரேஷ், ரமேஷ் ராஜ் ஆகியோர் ஆளுநரின் கையால் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழா வை புறக்கணித்தனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஏற்கெ னவே வரவேற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது, பேராசிரியர் கள் சுரேஷ், ரமேஷ் ராஜ் ஆகி யோரை சு.வெங்கடேசன் எம்.பி., நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரி வித்துள்ளார். அது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன், “விடுதலைப் போராட்ட மாண்பையும், பல்கலைக் கழகத்தின் உரிமையையும் அவ மதிக்கும் விதமாகவும் நடந்து கொண்டார் ஆளுநர் ரவி. எனவே அவர் பங்கெடுத்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை செனட் உறுப்பினர்கள் 73 பேரில் 45 பேர் புறக்கணித்துள்ளனர். இது இந்தியப் பல்கலைக்கழக வரலாற்றின் மகத்தான போராட்டமாகும். தங்களின் முனைவர் பட்டத்தை வாங்க மறுத்து பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த பேரா. சுரேஷ், பேரா. ரமேஷ்ராஜ் இருவ ருக்கும் எனது வாழ்த்துகளை தெரி வித்தேன். கல்விக்கழகு கசடுகளை புறந்தள்ளல்” என பதிவிட்டுள்ளார்.