தென்காசியில் தமிழக மருத்து வம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியது: தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு வலியுறுத் தப்பட்டு வருகிறது. தென்காசியில் மருத் துவக் கல்லூரி அமைக்க தன்னார்வ லர் ஒருவர் 16 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். அந்த இடத்தை ஏற்கெ னவே ஆய்வு செய்துள்ளோம். நீட் தேர்வு விலக்கு பெற்றே ஆக வேண் டும் என்பது தமிழக மக்களின் எண்ணம். அதை நிறைவேற்ற தமிழக முதல்வர் செயல் பட்டு வருகிறார். நீட் தேர்வு விலக்கு மசோ தாவை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாம தப்படுத்தினார். மசோதாவை திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. வேறு வழி யின்றி ஆளுநர் அந்த மசோதாவை குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார். குடியரசு தலைவர் அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். உள்துறை அமைச்சகம் தமிழகத்தில் உள்ள ஆயுஷ் துறை, கல்வித்துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளுக்கு சில விளக்கங் களை கேட்டுள்ளது. அவற்றுக்கு சரியான பதிலை அளித்துள்ளோம்.
இந்த மசோதா இப்போதும் உயிரோட்டத்துடன் உள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் நீட் தேர்வு விலக்கு மசோதாவில் கையெ ழுத்திடமாட்டேன் எனக் கூறியுள்ளார். இனி மேல் நீட் மசோதாவுக்கும், ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது ஒப்பு தல் இனி அவசியமும் இல்லை. இந்நிலை யில், நீட் விலக்கு மசோதாவுக்கு கையெ ழுத்திடமாட்டேன் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடி யரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் அந்த தகவலை ஆளுநருக்கு தெரிவிப்பார். இனி எந்த வகையிலும் ஆளுநருக்கும், நீட் விலக்கு மசோதாவுக்கும் தொடர்பு இல்லை. அரசுடன் இணைந்து பயணிப்பது தான் ஆளுநரின் கடமை. ஆனால் ஆளுநர் அதற்கு எதிராக செயல்படுகிறார். தேவை யற்ற விவகாரங்களில் வாங்கிக் கட்டிக் கொள்வது அவர் வகிக்கும் பொறுப்புக்கு தகுதியானதல்ல.