tamilnadu

சர்வதேச வர்த்தக சேவை வளாகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

சென்னை, மார்ச் 14- சென்னை  தரமணியில் டி.எல்எப் டௌன் டவுன் வளாகத்தில்  “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”என்ற சர்வதேச வர்த்தக சேவை வளாகத்திற்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (மார்ச் 14)  அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகமான டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் கூட்டு முயற்சியில் அமைய உள்ள பூங்காவில் ஐடி எனப்படும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் ஐடிஇஎஸ் எனப்படும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவன ங்கள் இடம்பெறும்.  68 லட்சம் சதுரஅடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பூங்கா வானது அமையவுள்ளது. கட்டிடம் மட்டும் பத்து லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்க ப்படும். ரூ. 5000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில், டி.எல்.எப் நிறுவனம் இத்தொகையை படிப் படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும். இந்த டிஎல்எப் டௌன்டவுன் வளாகம், பணியாளர்களுக்கென நலவாழ்வு மையம் மற்றும் உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவகங்கள், குழந்தைகள் காப்பகம், அங்காடி, கருத்தரங்கு மற்றும் கூட்ட அரங்குகள், பிரத்யேக உணவுகூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் வடிவ மைக்கப்பட உள்ளது.

இவ்வளாகக் கட்டடம்  பாரம்பரியமாகவும், அலுவலகங்களிலிருந்து மாறுபட்டு பணியாற்றுவதற்கான, சிறப்பான மாற்று அமைவிடங்களையும் கொண்டு அமைக்கப்படவுள்ளது. மேலும், இங்கு பணி யாற்றும் பணியாளர்களுக்கு புத்துணர்ச் சியை வழங்கவும், சமூகக் கலந்துரை யாடலை ஊக்குவிப்பதற்கான வசதிகளை யும் ஏற்படுத்த உள்ளது. செயல்படுத்தப்பட்டுவரும் இந்த டௌன்டவுன் திட்டமானது, சுமார் 70,000-க்கும் அதிகமான தகவல் தொழில்நுட்ப பணியா ளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும். அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள் க. பொன்முடி, தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலை மைச் செயலாளர்  எஸ். கிருஷ்ணன்,  டிட்கோ தலைவர் பங்கஜ் குமார் பன்சால், டி.எல்.எப் ரெண்டல் பிசினஸ் நிறுவனத்தின் மேலா ண்மை இயக்குநர்  ஸ்ரீராம் கத்தார், ஸ்டாண் டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சதீஷ் கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.