tamilnadu

img

லீலாவதி நினைவிடத்திலிருந்து புறப்பட்ட மதுரைத் தியாகிகள் நினைவுச் சுடர்!

லீலாவதி நினைவிடத்திலிருந்து புறப்பட்டமதுரைத் தியாகிகள் நினைவுச் சுடர்!

மதுரை, ஏப். 1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, தோழர் சீத்தாராம் யெச்சூரி நகரில் (மதுரை தமுக்கம்  மைதானம்) ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறுகிறது.  மாநாட்டிற்கு வெண்மணியிலிருந்து தியாகிகள் நினைவாக செங்கொடியும், சென்னை யிலிருந்து ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச் சுடர், தூத்துக்குடியிலிருந்து மாணவத் தியாகிகள் சோமசுந்தரம் - செம்புலிங்கம் நினைவுச் சுடர் ஆகியன மதுரைக்கு எடுத்து வரப்பட்டன. இதில், மதுரைத் தியாகிகள் நினைவுச் சுடர்ப் பயணமானது, தண்ணீரை காசுக்கு விற்பதையும், ரேசன் முறைகேட்டையும் எதிர்த்து போராடிய தோழர் லீலாவதி சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வில்லாபுரம் பகுதியிலிருந்து செவ்வாயன்று காலை புறப்பட்டது. கட்சியின் மூத்தத் தலைவரும் 1977-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் தொண்டர் படைத் தலைவராக இருந்தவருமான தோழர் எஸ்.ஏ. பெருமாள், மதுரைத் தியாகிகள் நினைவுச் சுடரை எடுத்துக்கொடுக்க மாநிலக்குழு உறுப்பி னர்கள் இரா. விஜய ராஜன், எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்விற்கு முனிச் சாலை பகுதிக்குழுச் செயலாளர் ஜெ. லெனின் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். சசிகலா, வை. ஸ்டாலின், மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தியாகிகள் நினைவுச் சுடருக்கு, மதுரை நக ரின் பல்வேறு பகுதிகளில் உற்சாக வரவேற்பளிக்கப் பட்டது.