tamilnadu

img

மதச்சார்பற்ற கூட்டணி வலுப்படும்: சீத்தாராம் யெச்சூரி

கண்ணூர், ஏப்.12- நாட்டில் இடதுசாரி ஜனநாயக மாற்றினை சாத்தியமாக்கும் முயற்சி தொட ரும் எனவும், மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். கண்ணூரில் செவ்வாயன்று (ஏப்.12) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யெச்சூரி மேலும் கூறியதாவது:  இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முறியடிக்க திட்டம் தயாரிக்கப்படும். இந்தி  பேசும் மாநிலங்களில் மக்களை சென்ற டைய கட்சி தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும். அந்த மாநிலங்களின் செயலாளர்கள் கூட்டம் விரைவில் கூட்டப்படவுள்ளது. பாசிச சக்திகள் மக்களை மத ரீதியாகவும் இன ரீதியாக வும் அணிதிரட்ட முயல்கின்றன. அங்கு  எழுந்து வரும் சாதாரண மக்களின் முக்கிய பிரச்சனைகள் அடக்கி ஒடுக்கப் படுகின்றன.

அந்த பிரச்சனைகளை கட்சி  கையில் எடுத்துக் கொள்ளும். அதற்காக அடிமட்டத்தில் இருந்து பணிகள் விரிவுபடுத்தப்படும். வகுப்புவாத அணிதிரட்டலுக்கு எதிரான தலையீடுகள் அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அவசியமாக இருக்கும். வடமாநிலங்களில் மட்டு மின்றி, வகுப்புவாதம் வேகமாக தலை யெடுக்கும் அசாம் போன்ற வடக்கு கிழக்கு மாநிலங்களிலும் எங்கள் தலையீடு வலுப்பெறும். விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் வலுவான தலையீடு சாத்தியமானது. தில்லியில் நடந்த போராட்டங்களுக்கு முன்பு நாசிக்கில் இருந்து மும்பை வரை நீண்ட பேரணி வெற்றி பெற்றது. விவசாய அமைப்புகளை ஒருங்கிணைக்க உதவிய மாபெரும் போராட்டம் மகாராஷ்டிர விவசாயிகளின் நெடும்பயணம் . இவ்வாறு செய்தியாளர்களிடம் யெச்சூரி கூறினார்.