மதுரை, ஜன.4- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலவ ளவு ஊராட்சி காந்திநகர் பகுதி யில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக பேருந்து நிறுத்தம் ஓடு களால் கட்டப்பட்டது. சேதம டைந்துள்ள இதனை மாற்றக் கோரியும் புதியது கட்டித்தரக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மேலவளவு கிளை மற்றும் மக்கள் சார்பில் பலமுறை மேலவளவு ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகளுக்கும் பலமுறை மனுக்கள் வழங்கப்பட்டன. ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஞாயிறன்று மாலை மேலூர் பகுதியில் திடீரென்று பெய்த மழையால் பேருந்து நிறுத் தத்தில் நின்றிருந்த மக்கள் மீது ஓடுகள், மரங்கள் விழுந்தது. சிறு காயங்களுடன் அவர் உயிர்தப்பி னர். இந்த பேருந்து நிறுத்தம் குறித்து 27.12.2021 அன்று கூட கட்சியின் மேலவளவு கிளைச் செயலாளர் கே. கார்த்திக் சார் பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மேலவளவு ஊராட்சி யில் இந்தப் பேருந்து நிறுத்தம் தவிர மற்ற அனைத்து பேருந்து நிறுத்தங்களும் கான்கிரீட் கட்டி டத்தினால் ஆனது. மேற்கூரை இடிந்து விழுந்த பேருந்து நிறுத் தம் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முன்னெச்ச ரிக்கையாக மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் உடனடி யாக பேருந்து நிறுத்தத்திற்கு கான்கீரிட் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இல்லையெனில் மக்க ளைத் திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள் ளது.