சாம்பா ஜம்மு காஷ்மீர். இந்தியாவின் முதல் கார்பன் இல்லா பஞ்சாயத்து என்ற பெருமை இனி ஜம்மு காஷ்மீரில் சாம்பா மாவட்டத்தில் உள்ள அல்லி என்ற கிராமத்திற்கு உரியது. மூன்றே வாரங்களுக்குள் இங்கு 500 கிலோ வாட் திறனுடைய சூரிய ஆற்றல் நிலையம் அமைக்கப்பட் டுள்ளது. மத்திய அரசின் கிராமப்புற ஆற்றல் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் 6480 சதுர மீட்டரில் 1500 சூரிய மின் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
ஒளி வீசும் வீடுகள்
இதன் மூலம் 340 குடும்பங்களுக்கு மின்சாரம் கிடைக்கும். கிராமத்தின் அன்றாட மின் தேவை 2000 யூனிட். இத்திட்டத்திற்கான முதலீடு 2.75 கோடி. இந்த கிராமம் ஜம்முவில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இயற்கைக்கு நட்புடைய சாலைகள், மின் பேருந்துகளுமே போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
சூரிய அடுப்பில் தயாராகும் உணவு
சூரிய சக்தியால் எரியும் எல் இ டி விளக்குகள் எல்லா வீடுகளிலும் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய ஆற்றலில் இயங்கும் அடுப்புகள், குக்கர்கள் அமைக்கப்பட் டுள்ளன என்று கிராமத்தலைவர் ரவீந்தர் ஷர்மா கூறுகிறார். விவசாயிகளின் வேளாண் பணிகளுக்காக கிராமத்தில் பத்து சூரிய சக்தியில் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் (Solar pumps) நிறுவப் பட்டுள்ளன.
சூழல் நட்புடைய வயல்கள்
விரைவில் மேலும் நாற்பது இத்தகைய இயந்தி ரங்கள் நிறுவப்படவுள்ளது. கிராமத்தில் விவசாயப் பணிகள் முழுவதும் இயற்கை வழியிலேயே நடை பெறுகின்றன. கார்பன் உமிழ்வை முற்றிலும் இல்லாமல் செய்து எல்லா நிலைகளிலும் சூழலிற்கு நட்புடைய விதத்தில் வாழும் இந்த கிராமம் உலகிற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.