tamilnadu

img

குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்தது

சென்னை, டிச.27- சென்னை திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டிடம் இடிந்து விழுந்தது. அனைவரும் பத்திர மாக வெளியேறிய நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் யாருக்கும் காயம் இல்லை. சென்னை திருவொற்றியூர் அருகே யுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு திங்களன்று காலை திடீரென்று சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. குடிசைமாற்று குடி யிருப்பானது 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 331 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.  இதில் ஒரு பகுதியாக தனியாக கட்டிடம் இருந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று காலை கட்டிடத்தில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது.

விரிசல் அதிகமாவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். வீட்டில் இருந்த அனைவரும் வெளி யேறிய நிலையில் அருகில் இருந்த மக்கள் ஆபத்தை உணராமல் வீட்டின் அருகே இருந்ததாலும் விரிசல் அதிகமாவதை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியே கூச்ச லிட்டு அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். கட்டிடமானது விரிசலுடன் சற்று சாய்ந்த நிலையில் இருந்தது. இது குறித்து உடனடியாக மாநகராட்சி அதிகாரி களுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கட்டி டம் திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயங்கள் இன்றி அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

கட்டிடமானது ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு பழுதடைந்த நிலையில் இருந்த தால் இதன் கட்டிடத்தை சீரமைப்பது குறித்து பலமுறை புகார்கள் அளிக்கப் பட்டிருந்தது. கடந்த ஆண்டு இந்த கட்டிடத்தை புதுப்பித்து தருவதற்காக மனுக்கள் அளித்துள்ள நிலையில் இது வரை இந்த கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து யாரும் ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில் இந்த கட்டிடமானது இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து தற்போது காவல்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதி காரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற் கொண்டனர். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி உள்ளனரா என்பது குறித்தும் விசா ரித்து வருகின்றனர். அடுக்குமாடி கட்டிட மானது திடீரென்று இன்று சரிந்து விழுந்த தில் அனைத்து பொருட்களும் சேத மடைத்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ள னர். தங்குவதற்கு கூட இடமில்லாமல் தற்போது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல்வர் தலையீடு இந்நிலையில் திருவொற்றியூரில் வீடுகள் இடிந்து விழுந்து பாதிப் படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் மற்றும் நிவாரண உதவி  வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,  ‘திருவொற்றி யூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். விபத்து நடந்த பகுதிக்கு உடனடி யாக மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து,  விபத்தில் வீடிழந்த குடும்பத்தின ருக்கு உடனடியாக மாற்று குடியிருப்பு கள் வழங்கவும் அறிவுறுத்தியுள் ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பி லிருந்து மீண்டு புதிய வாழ்க்கை யைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இது போன்ற விபத்து ஏற்படாத வகை யில் பழைய குடியிருப்புகளின் விப ரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உட னடியாக மேற்கொள்ளவும் அறி வுறுத்தியுள்ளேன் எனக் கூறியுள்ளார்.