tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றுவார்

மதுரை, டிச. 10- தமிழகத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் சம்மேள னத்தின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறை வேற்றுவார் என்று மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடே சன் நம்பிக்கை தெரிவித்தார். மதுரை பழங்காநத்தம் பகுதி யில் நடைபெற்ற அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் சம்மேளனத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாட்டுப்  பொதுக்கூட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது: அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் தங்களது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முதலில் வலி யுறுத்தவில்லை. அவர்கள் முதன் முதலில் வலியுறுத்தியது, ஒன்றிய மோடி அரசு ஊட்டச் சத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டாதீர்கள். ஊட்டச் சத்தை வலுவாக்குங்கள் என்பதுதான். இதைத் தான் ஊழியர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது இந்திய தொழிற்சங்க மையம். “முதலில் குழந்தைகள், அடுத்ததுதான் ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகள்”. தமிழக அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் தங்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அமைப் பின் நிர்வாகிகளும் தமிழக அரசு கால அவகாசம் கேட்டுள் ளதாகக் கூறினார்கள். உங்க ளது கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்று வார் என்ற நம்பிக்கை உள்ளது. அங்கன்வாடி ஊழியர்கள் மூன்று விதமான பதிவேடு களைப் பராமரிக்கிறார்கள். அதில் முதல் பதிவேடு குழந்தை கள் வளர்ச்சி விகிதம் குறித்தது. மோடி ஆட்சியில் குழந்தைகளும் வளர்ச்சியடை யவில்லை.

17-ஆவது மக்கள வையில் மோடியின் வருகை யும் வளரவில்லை. இதுவரை எந்த ஒரு மசோதாவின் மீது  அவையில் விவாதம் நடந்தா லும் அதில் பங்கேற்காத ஒரே நபர் பிரதமர் மோடி தான். குழந்தைகளுக்கு ஊட்ட சத்திற்கான நிதி ஒதுக்கீடு 30 சதவீதம் வெட்டப்பட்டுள்ளது. எங்களது குழந்தைகளுக்கு தரமான உணவு தாருங்கள் என பெற்றோர்கள் மோடி அரசிடம் கேட்கவேண்டும். பெற் றோர்களின் கோரிக்கையை அங்கன்வாடி ஊழியர்களும்-உதவியாளர்களும் கேட்கின்ற னர். ஏனெனில் பெற்றோர் களுக்கு நிகரானவர்கள் அங்கன்வாடி ஊழியர்கள். மதுரை நகர வீதிகளில் கண்ணகி ஒருவர் மட்டுமே நீதி  கேட்டார். ஆனால் 10 ஆயிரம் அங்கன்வாடி ஊழியர்கள்-உதவியாளர்கள் மோடி அரசிடம் நியாயம் கேட்டு பேரணியாக வந்துள்ளார்கள். கண்ணகி நீதி கேட்டதில் 100 சதவீதம் நியாயம் இருந்தது. அதைவிட  நீதியும்-நியாயமும் கேட்பதில் அங்கன்வாடி ஊழியர்கள் விஞ்சி நிற்கிறார்கள். கண்ணகி  தமக்காக நியாயம் கேட்டார்.  ஆனால், அங்கன்வாடி ஊழி யர்கள்-உதவியாளர்கள் ஒவ்வொரு மையங்களிலும் தினம்தோறும் வரும் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு நியாயம் கேட்கிறீர்கள். உங்கள் நியாயங்களும் நீதியும் வெல்ல போராட்டத்தை தொடருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.