சென்னை,பிப். 23- இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அமைச் சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயல கத்தில் சந்தித்து பேசியபோது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மாணவர்களுக்கு இந்திய அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில்நுட்பம்” துறைகளுக்கான பட்டப் படிப்பை தொடர்வதற்கான 100 இடங்களை தமிழகப் பல்கலைக்கழகங்களின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளுதல், விரைவில் அமையவிருக்கும் மலையகப் பல்கலைக்கழகத்திற்கான விரிவுரையாளர்கள் மற்றும் தொழில்சார் பணியாளர்களை தமிழக அரசின் உதவி யுடன் பெற்றுக்கொள்ளுதல், தமிழகத்தின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் மலையகப் பல்கலைக்கழகத் தினை இணைத்து நடத்துவதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடினார்.
அதோடு மலையக பெருந்தோட்ட பகுதிகளில் செயல்படும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்க ளில் மோட்டார் வாகன தொழில்நுட்பம், மின்னணு சாதனங்கள் தயாரிப்பு , கட்டுமானம், கணினி தொழில்நுட்பம் மற்றும் விவசாய பொறிமுறையை, தொழில்நுட்ப துறைசார் நிபுணர்களுக்கு இந்தியத் தொழில்துறை நிபுணர்க ளால் பயிற்சி அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மலையக பாடசாலை ஆசிரியர்களுக்கான கணினி, விஞ்ஞானம், ஆங்கிலம் பாட கல்விசார் மேம்பாடு பயிற்சி களை இந்தியக் கல்வியாளர்களால் பயிற்சி வழங்கவும், வேளாண்மைக்கான முதலீட்டு வாய்ப்புகளை தமிழக அரசு வாயிலாக பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாகவும் முதல மைச்சருடன் இலங்கை அமைச்சர் விரிவாகக் கலந்துரை யாடினார். இந்நிகழ்வின்போது கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றையும் மு.க ஸ்டாலினிடம் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அளித்தார். இச்சந்திப்பின் மூலம் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பல்வேறு மேம்பாட்டு உதவிகள் மலையக தமிழர்களுக்கு வந்தடையும் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். இச்சந்திப்பின்போது, நுவரெலியா மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.