சென்னை,பிப்.15- கள ஆய்வில் முதல மைச்சர் திட்டத்தின்கீழ் சேலம், தருமபுரி, கிருஷ்ண கிரி மற்றும் நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள புதனன்று(பிப்.15) முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றார். ஓமலூர் தாலுகா அலுவ லகத்தில் ஆய்வை முடித்து விட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பிரமாண்டமாக கட்டப்பட் டுள்ள இரண்டு அடுக்கு பேருந்து நிலையம், வணிக வளாகம், நேரு கலை யரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, இரண்டு அடுக்கு பேருந்து நிலை யத்திற்குள் ஒவ்வொரு தளமாக சென்று என்ன? என்னவசதிகள் செய்யப் பட்டுள்ளது என்பதையும் பார்வையிட்டார். தூண்கள் மற்றும்ஜன்னல்கள், மேற்கூரை உள்ளிட்டவை எவ்வாறு கட்டப்பட்டி ருக்கிறது என்பதையும் பார்வையிட்டார். அப்போது பேருந்து நிலையத்தில் மேலும் என்ன என்ன? பணி கள் செய்யப்பட உள்ளன, அவை எப்போது முடியும் என அதிகாரிகளிடம் கேட்ட றிந்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்நவீன வசதிகளுடன் ஈரடுக்கு பேருந்துநிலையம் கட்ட ரூ.92 கோடியே 13 லட்சம்ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. இதை யடுத்து பழைய பேருந்து நிலையம் பகுதி முழுவதும் இடிக்கப்பட்டுஈரடுக்கு பேருந்து நிலையம் பிர மாண்டமாக கட்டப்பட்டுள் ளது. ஈரடுக்கு பேருந்து நிலைய பணிகள்95 விழுக்காட்டிற்கு மேல் முடிவ டைந்து விட்டது இங்கு தரை மற்றும்முதல் தளத்தில் பேருந்துகள் நிறுத்து வதற்கான அனைத்து வசதியும் ஏற்படுத்தப்பட்டுள் ளது.