செங்கல்பட்டு, ஜூலை 29- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் தொடங்கின. இரண்டு அரங்கு களில் நடைபெற்று வரும் போட்டி யில் 177 அணிகள் பங்கேற்றுள் ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். சென்னை அடுத்து மாமல்ல புரம் பூஞ்சேரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் பாய்ண்ட் அரங்கில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில அமைச்சர் மெய்யநாதன் முறைப்படி தொடங்கி வைத்த னர். ஒன்றிய அமைச்சர் முருகன், செஸ் சர்வதேச மற்றும் இந்தியா சம்மேளன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 187 நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் அரங்கம் 1 மற்றும் அரங்கம் 2 என இரண்டிலும் ஒன்று கூடினர். முதல் கட்டமாக 177 அணிக ளுக்கு இடையிலான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு மாலை 3 மணிக்கு அந்த போட்டி கள் தொடங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியளிப்பதோடு, பெருமை யாகவும் இருக்கிறது”என்றார்.