tamilnadu

இந்திய மீனவர்கள் சுட்டுக்கொலை வழக்கை தள்ளுபடி செய்தது இத்தாலி நீதிமன்றம்

ரோம்,பிப்.1- கேரளாவின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  2012 பிப்ர வரி 15 அன்று  விசைப்படகில் 11 இந்திய மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ‘என்ரிகா லாக்ஸி’ என்ற இத்தாலிய சரக்கு கப்பல் அந்த வழியாக சென்றது.  அதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி கடற்படையைச் சேர்ந்த மசிமிலியானோ லதோர், சல்வடோர் கிரா னே ஆகியோர்  இந்திய மீன வர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.  இதில் அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் உயிரிழந்தனர். உடன் இருந்த 9 மீனவர்கள் காய மடைந்தனர். இந்த வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர்.  பின்னர், பல்வேறு சட்ட நட வடிக்கைகளுக்குப் பிறகு அவர்கள் இத்தாலி  திரும்பினர்.   இந்த வழக்கை  சர்வ தேச நீதிமன்றத்துக்கு இத் தாலி கொண்டு சென்றது. வழ க்கை விசாரித்த சர்வதேச நீதி மன்றம், “இந்திய மீனவர் களை இத்தாலி கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றது குற்றம். இதற்கான இழப் பீட்டை இத்தாலி அரசு வழங்க வேண்டும். இவ்வழக்கை இத்தாலி நீதிமன்றத்தில் நடத்தலாம்” என்று உத்தர விட்டது.  இதையடுத்து, இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.  இந்த நிலையில், போதிய ஆதா ரங்கள் இல்லை எனக்கூறி இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான கொலை வழக்கை  அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.