tamilnadu

img

மேற்குவங்கத்தில் வாக்காளர்கள் புறக்கணித்த வாக்குச்சாவடியில் 95% வாக்குப்பதிவு எப்படி?

கொல்கத்தா, ஜூலை, 19- மேற்குவங்கத்தில் வாக்காளர்கள் புறக்கணித்த வாக்குச்சாவடியில் 95% வாக்குப்பதிவு எப்படி என கேள்வி எழுப்பி கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரு வாரியான இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாக அறி விக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் கொல்கத்தா உயர்நீதிமன்றம் தேர்தல் முடிவு கள் உட்பட ஒட்டுமொத்த பஞ்சாயத்து தேர்தல் செயல்முறையும் தங்களின் இறுதி  உத்தரவுக்கு உட்பட்டது என்று அதிரடியாக அறிவித்திருந்தது.  இந்நிலையில் ராஜர்ஹட் மாவட்டம் ஜங்க்ரா ஹதியாரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 2 பகுதியில் வசிக்கும் மக்கள், வாக்குப்பதிவு நாளில்  தேர்தலை புறக்கணித்திருந்தனர். ஆனால்  அந்த வாக்குச்சாவடியில் வாக்குகள் பதி வானதாக புகார்கள் எழுந்தன. வாக்கு  எண்ணிக்கை நாளில் அந்த வாக்குச்சாவடி யில் பதிவான வாக்குகளை எண்ணும் போது, அந்த ஒரு வாக்குசாவடியில் மட்டும்  95% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக சப்தர்ஷி தேவ் என்பவர் மாநில தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் சப்தர்ஷி தேவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அம்ரிதா சின்ஹா, வாக்காளர்கள் புறக்கணித்த வாக்குச்சாவடியில் 95% வாக்குப்பதிவு எப்படி என கேள்வி எழுப்பி, இதுகுறித்து விரிவான விசார ணை நடத்துமாறு டிஜிபி மற்றும் ஐஜிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு  தொடர்பாக ராஜர்ஹட் வட்டார வளர்ச்சி அ லுவலருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.