சிதம்பரம், மார்ச் 13- சிதம்பரம் அருகே பூவாலை கிராமத்தை சேர்ந்த. மதன்குமார் (26) கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், சனிக்கிழமை இரவு பணிக்கு சென்ற இவர் இடது கையில் காயங்களுடன் சாமியார் பேட்டை கடற்கரையில் இறந்த நிலையில் ஞாயிறன்று காலை இவரது உடல் கரை ஒதுங்கியது. உடலை புதுச்சத்திரம் காவல்துறையினர் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தற்கொலையா, கொலையா ? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.