tamilnadu

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு எதிராக ‘எஸ்மா’ சட்டத்தை ஏவிய பாஜக அரசு

புதுதில்லி, ஜன.12- ஹரியானா மாநிலத்தில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு எதிராக எஸ்மா என்னும் கொடூரமான அத்தி யாவசிய சேவைப் பராமரிப்பு சட்டத்தைப் பிரயோகித்திருப்பதற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிஐடியு சார்பில் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: ஹரியானா மாநிலத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியானா சிவில் மெடிக்கல் சர்வீஸ் சங்கத்தின் சார்பில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக, அவர்கள் ஆறு மாத காலத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தடை விதித்து அத்தியாவசிய சேவைப் பராமரிப்புச் சட்டத்தை ஏவி யிருக்கும் ஹரியானா மாநில பாஜக அர சாங்கத்தின் அத்துமீறிய எதேச்சதிகார நட வடிக்கைக்கு சிஐடியு கடுமையாகக் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.   மருத்துவர்கள், முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது, பணியிலிருக்கும் மருத்துவர்களுக்கு 40 சதவீத ஒதுக்கீடு தேவை என்று கோரி வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டார்கள்.

மாநிலத்தில் கொரோனா பெருந் தொற்றுக்கு எதிராக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு பணி யில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் அதே  சமயத்தில் தங்கள் நியாயமான கோரிக்கை களை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடு பட்டார்கள்.  போராடிய மருத்துவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் கொரோனா பெருந் தொற்று தொடர்பான கடமைகளுக்கும், சடலக்கூராய்வு போன்ற பணிகளுக்கும் வில க்கு அளித்திருந்தார்கள். எனினும் ஹரியானா அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது எஸ்மா சட்டத்தை ஏவுவதுபோலவே போராடும் மருத்துவர்கள் மீதும் கொரோனாவைக் கார ணம் காட்டி தன்னுடைய ஜனநாயக விரோத அரக்கத்தனத்தைக் காட்டியிருக்கிறது. சிஐடியு, இத்தகைய ஹரியானா அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நட வடிக்கையைக் கண்டித்திடும் அதே சமயத்தில், அரக்கத்தனமான எஸ்மா சட்ட த்தை நிபந்தனை எதுவுமின்றித் திரும்பப் பெற வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை கள் மூலம் போராடும்  ஹரியானா சிவில்  மெடிக்கல் சர்வீஸ் சங்கத்தின் தலைவர்களு டன் ஹரியானா அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும்.   இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.