tamilnadu

img

குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகின்றனர்

உயர்நீதிமன்றத்தில்  சிபிஐ குற்றச்சாட்டு

மதுரை, ஏப்.19-  சாத்தான்குளம் தந்தை, மகன்  கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்  கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றனர் என்று  உயர்நீதிமன்றத்தில் சிபிஐ  குற்றம்சாட்டி யுள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்  களான ஜெயராஜ்,அவரது மகன் பென் னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கிக் கொன்ற னர். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர்  மற்றும் காவலர்கள் கைது செய்யப் பட்டனர். இந்நிலையில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்  யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த  வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து பின் சிபிஐ காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், நட்சத்திர சாட்சிகளான  ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சி களை மட்டுமே இதுவரை விசாரித்துள்ள னர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த  ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது.  மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன் னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும்.

கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவ லில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல  முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்  பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங் கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்.” என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி  இளங்கோவன் முன்பு புதனன்று நடை பெற்றது.  அப்போது சிபிஐ தரப்பில் கூறுகை யில் , சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசா ரணை செய்ய வேண்டியுள்ளது. குற்றம்  சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்த டிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசா ரணையை தாமதமாக்கி வருகின்றனர். ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகின்  றது. ஆகவே, மே மாத நீதிமன்ற விடுமுறை  காலத்திலும் இந்த வழக்கினை கீழமை  நீதிமன்றம் விசாரணை செய்ய அனு மதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டது. மேலும், குற்றவாளிகள் போலீசார் என்பதால் சாட்சியை கலைக்க வாய்ப்  புள்ளது.எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து நீதிபதி, வழக்கினை தீர்ப்பிற்காக ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.