tamilnadu

img

11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் இன்று துவங்குகிறது

கோலாலம்பூர், ஜூலை 20 - 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி  மாநாடு மலேசியத் தலைநகர் கோலா லம்பூரில் ஜூலை 21 (இன்று) துவங்கு கிறது. இம்மாநாட்டில் தமிழ்நாட்டி லிருந்து பிரபல எழுத்தாளர்களும், இலக்கிய படைப்பாளிகளுமான மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.  செம்மொழியான தமிழ்மொழியின் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21 முதல் 23 வரை மலாயா பல் கலைக்கழகத்தில் பெரும் உற்சாகத்து டன் நடைபெறுகிறது. ஜூலை 22 மாலை 5 மணியளவில் இம்மாநாட்டை மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இம்ராஹிம் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைக்கிறார்.  இம்மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவிய லாளர்கள், பார்வையாளர்கள் உள்பட மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற் கிறார்கள்.

வெளிநாடுகளிலிருந்து மட்டும் 700 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.  இதற்கு முன்பு மூன்று முறை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியா ஏற்று நடத்தியுள்ளது. தற்போது நான்கா வது முறையாக இம்மாநாட்டை மலேசியா நடத்துகிறது. தமிழ்நாட்டி லிருந்து இம்மாநாட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட நான்கு அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.  தமிழ்நாட்டின் எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் பங்கேற்கும் இம்மாநாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், தீக்கதிர் ஆசிரி யருமான மதுக்கூர் இராமலிங்கம், எழுத்தாளரும்  திண்டுக்கல் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி ஆகியோரும் பங்கேற் கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்பதற் காக இருவரும் ஜூலை 18 அன்று சென்னையிலிருந்து மலேசியா புறப்பட்டுச் சென்றனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுமான இவர்களுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர் பி.சம்பத், மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள் மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.