10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 28 அன்று தொடங்கியது. தனித் தேர்வர்கள் 25 ஆயிரத்து 888 பேர், சிறைவாசிகள் 272 பேர் உட்பட தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரம் மாணவர்கள், 4,113 தேர்வு மையங்களில் இந்த தேர்வை எழுதினர். இந்தாண்டு 15 ஆயிரத்து 729 மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியருக்கு மொழிப்பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதுடன், சொல்வதை எழுதுபவர், தேர்வு எழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன.