தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞர் செம்மொழித் தமிழ் விருது
முதலமைச்சர் வழங்கினார்
சென்னை, ஜூன் 3 - சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாளான செம்மொழி நாள் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. கண்காட்சி பார்வை இவ்விழாவில் தமிழ் மொழி உருவாக்கம், தொல்லியல் சான்று கள், செம்மொழித் தகுதி, 1815 முதல் 1950 வரை வெளிவந்த செவ்வி யல் நூல்கள், 2021 முதல் 2025 வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட கலை ஞர் கருவூலம் மற்றும் ஒளிப்படங்கள் கொண்டு கலைவாணர் அரங்கத் தில் அமைக்கப்பட்ட கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து “முத்தமிழறி ஞரின் முத்தமிழ்” இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சியும், “எல்லோர்க்கும் எல்லாமுமாய்” என்ற தலைப்பில் கலைஞர் குறித்த ஆவணப்படமும், செய்தித் துறையால் உருவாக்கப் பட்ட “செம்மொழி நாள்” குறித்த குறும் படமும் திரையிடப்பட்டன. ரூ.10 லட்சம் விருது பிறகு முனைவர் தாயம்மாள் அறவாணனுக்கு 2025 ஆம் ஆண்டுக் கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதையும், விருதுத் தொகையாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை யும் முதலமைச்சர் வழங்கினார். உதவித்தொகை உயர்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ம.சக்கரவர்த்தி, இரா.மோகன சுந்தரம், ப.பானுமதி (எ) ஆதிரா முல்லை, அ.இதயகீதம் ராமானுஜம், ந.சுந்தரி ஆகிய அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 5 பேருக்கு உயர்த்தப் பட்ட உதவித்தொகைக்கான ஒப்ப ளிப்பு அரசாணையை முதலமைச்சர் வழங்கினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப் பட்ட இராசேந்திரன் சங்கர வேலா யுதன் எழுதிய “தமிழ் வினையடி கள் – வரலாற்று மொழியியல் ஆய்வு” மற்றும் பா.ரா. சுப்பிரமணியன் எழுதிய “சங்க இலக்கியச் சொல்வளம்” ஆகிய இரு நூல்களையும் வெளியிட்டார். கலைஞர் சிலைக்கு மரியாதை முன்னதாக, கலைஞர் 102 ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவினார். இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் பணியாற்றும் காவலாளிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பிறகு கலைஞர் வசித்த கோபால புரம் இல்லத்தில் அவரது உருவப்படத் திற்கு மலர்தூவி வணங்கினார். இந்நிகழ்வுகளில் திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம், ரகுபதி, பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா, மக்க ளவை உறுப்பினர் தயாநிதி மாறன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.