tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மே 24- முதல்  தென்மேற்குப் பருவமழை  

சென்னை, மே 20 - மே 22 அன்று அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவா கும் என்றும், அரபிக் கடலில் உரு வாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்து வலுப் பெறும் என்றும், மே 24 அல் லது 25ஆம் தேதியே தென்மேற்கு  பருவமழை தமிழ்நாட்டில் தொட ங்கும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பள்ளி திறக்கும் அன்றே புத்தகம்

சென்னை, மே 20 - கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளி லேயே மாணவர்களுக்கு பாடப் புத் தகங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு புத்த கங்கள் அனுப்பப்பட்டு வருகின் றன. 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு தேவையான 99 சதவிகித புத்த கங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலை யில் உள்ளன. 4.16 கோடி புத்த கங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன என்று கூறியுள்ளது. இரு மடங்கான கொரோனா பாதிப்பு  சென்னை, மே 20 - தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தீவிரத் தன்மை கொண்டதில்லை. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதால் கவலைப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த வாரம் வெளி யிட்ட தரவுகளின்படி, ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 34 தொற்று கள் அதிகரித்துள்ளன.

அதாவது மே 12 அன்று 32 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை,

மே 19 அன்று 66 ஆக அதி கரித்துள்ளது. அதேநேரம் மே 12 முதல் 19 வரை தமிழகம் முழு வதும் மொத்தம் 32 நோயாளிகள் வீடு திரும்பி உள்ளனர்.