tamilnadu

அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு அரசு ஊழியர் சங்கம் நன்றி

சென்னை, டிச. 28- தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் ்படியை 1.1.2022 முதல் 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக உயர்த்தி வழங்கிடவும், ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்க ளுக்கு பொங்கல் பரிசு வழங்கிடவும் 8894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முதல்வ ருக்கு நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தலைவர் மு.அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் மு.அன்பரசு, பொதுச்செயலாளர் ஆ.செல்வம் உள்ளிட்ட மாநில நிர்வாகி கள் சந்தித்து மாநாட்டில் கலந்து கொண்டு அரசு ஊழியர்சங்கத்தை கவுரவப்ப டுத்தியதற்காகவும், மாநாட்டு பேருரையில் அரசு ஊழியர்களின் கோரிக்கை கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்

என்ற நம்பிக்கையை விதைத்ததற்காகவும் முதல்வருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நன்றிகளையும், பாராட்டு களையும் தெரிவித்தோம். அப்போது புத்தாண்டில் நல்லதொரு அறிவிப்புகள் வரும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதையும் அதை தமிழக முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் என்ற அசையாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்பதையும்  தெரிவித்து, அதற்கான நன்றிக ளையும் முன்கூட்டியே தெரிவித்து விட்டு வந்தோம். செவ்வாய்க்கிழமை மதியமே முதல்வர்  அகவிலைப்படி 14 விழுக்காடு மற்றும் சி மற்றும் டி பிரிவினருக்கான போனஸ் கோப்பு களில் கையெழுத்திட்டு அரசாணை வெளியிட்டுள்ளது,  எங்களுக்கு மட்டு மல்ல அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து தொட ரும் என்ற அசையா நம்பிக்கையோடுஅரசு ஊழியர்கள் அனைவரும் நன்றிப் பெருக்குடன்  காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சந்திப்பின்போது துணை பொதுச் செயலாளர்கள் ஆ.மங்கள பாண்டியன், மு.சீனிவாசன்,  துணைத் தலைவர்கள் கோ.பழனியம்மாள், சி.பரமேஸ்வரி, மு.செல்வராணி, மாநிலச் செயலாளர்கள், சா.டேனியல் ஜெயசிங், உ.சுமதி, சா.கோதண்டபாணி ஆகியோர் உடன் இருந்தனர்.