திருவாரூர், நவ.10- தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் வரை உள்ள நெடுஞ்சாலை மிகவும் பழு தடைந்து குண்டும் குழியுமாக போக்கு வரத்துக்கு முற்றிலும் லாயக்கற்ற நிலை யில் உள்ளது. ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங் கள் ஏற்பட்டு மரணப் படுகுழிகளாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் தட்டுத் தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில சமயங் களில் பெரும் விபத்துகள் ஏற்பட்டு ஆபத் தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பதும், இறந்துபோவதுமான சம்பவ ங்கள் நேர்ந்துள்ளன. மழை பெய்யும் பொழுது சாலையில் உள்ள பள்ளத்தில் நீர் தேங்கி நிரம்பி உள்ளதால் பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாக னங்களில் செல்வோர் இந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டு கீழே விழுந்து படுகாயம் அடைந்து எலும்பு முறிந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. மழை இல்லாத பொழுது சாலையில் உள்ள மண் துகள்கள் புழுதியாகப் பறந்து ரோட்டில் செல்வோர்களின் கண்களை பதம் பார்ப்பதோடு அதிலும் கூட மோசமான விபத்துகள் ஏற்படுகிற நிலமை உள்ளது. பல்வேறு சமயங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கொரடாச்சேரி அருகே கிளரியம் பகுதி யில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஏற்பட்டுள்ள பள்ளத்தில் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகளும் கீழே விழுவதுடன் சிறிய தாழ்தளக் கார்களும் பள்ளத்தில் அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன. இதே போல் அம்மையப்பன் அரசு மேல் நிலைப்பள்ளி எதிரே சாலையில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தங்கள் அணிந் திருக்கும் சீருடைகள் சேறும் சகதியும் ஆகிறது என புலம்புகின்றனர்.
காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிச்செல்லும் சுமார் 10 மற்றும் 12 சக்க ரங்கள் உள்ள கனரக லாரிகள் இந்த நெடுஞ்சாலை வழியாகத்தான் தொடர்ந்து செல்கின்றன. பள்ளங்களில் இறங்கி ஏறிச் செல்லும்போது திடீர் திடீர் என சப்தம் கேட்பதுடன் சாலையோரம் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சில வீடுகளின் சுவர்களிலும் விரிசல் ஏற் பட்டுள்ளது. சாலையில் செல்லும் வாக னங்கள் அனைத்தும் நல்ல இடம் பார்த்து பாம்பு போல் வளைந்து செல்வதால் மேலும் விபத்துகள் கூடுதலாக ஏற்படுவ தற்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகை யில், தமிழகத்தின் பிற பகுதிகளில் பிர தான சாலைகள் ஓரளவிற்கு நல்ல நிலை யில் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் கிராமச் சாலைகள்கூட பரவாயில்லை. ஆனால் தஞ்சாவூரில் இருந்து வேளாங் கண்ணி, நாகூர், சிக்கல் ஆகிய புனித தலங்களுக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதை எந்த அதிகாரி களும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை என்று கவலை யோடு தெரிவிக்கின்றனர். இரு சக்கர வாகனத்தில் நீடாமங்கலத் தில் இருந்து திருவாரூர் வரை சென்று வந்தால் முதுகு வலியும் இடுப்பு வலியும் ஏற்பட்டுவிடுகிறது. எனவே அதிக மழை பெய்து சாலை மிகவும் மோசம் அடை வதற்குள் தஞ்சை திருவாரூர் சாலை யினை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என்கின்றனர் பொது மக்கள்.
இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை யை சீர் செய்யக் கோரி 2022 அக்டோபர் 7-ந் தேதி அம்மையப்பன், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் தலை வர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைவில் செப்பணிட்டு தருவதாக வாக்கு றுதி அளித்துள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதியும் தற்போது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது என்பதுதான் வேதனை யான செய்தி. பருவமழை தொடங்குவதற்கு முன்ன தாக இதுபோன்ற பணிகளை அவசர மாக முடிக்க வேண்டுமென்று அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினும் சென்னையில் பல இடங் களுக்கு நேரில் சென்று மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டுள் ளார். அதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தலைமை செயலாளர் இறையண்பு அவர்களும் வடகிழக்கு பருவ மழை விரை வில் தொடங்க உள்ளதால் ஊரக வளர்ச்சி துறை செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங் களிலும் மழைநீர் வடிகால் பணிகளுக் காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் பழுதடைந்த சாலைகள் முடிவடையாத பணிகள் ஆகியவற்றை உடனடியாக நிறைவு செய்திட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இப்படி அரசின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டும் கூட திருவாரூர் மாவட்டத் திலுள்ள மிகவும் பிரதான சாலையான வேளாங்கண்ணி முதல் திருவாரூர் முதல் தஞ்சாவூர் சாலையை இன்னும் சீர் செய்யாமல் இருப்பதன் நோக்கம் என்ன என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் தினம் தினம் கேட்டுக்கொண்டே உள்ளனர். வடகிழக்கு பருவமழை மிக விரை வாக தொடங்க உள்ள சூழ்நிலையில் இப்போதாவது அவசர உணர்வுடன் மாநில அரசு, மாவட்ட நிர்வாகம், நெடுஞ் சாலை துறை இந்த பணியை சீர் செய்ய முன்வருமா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
- ஆரூரான்