சென்னை, ஜன. 2 - ஜவுளி, காலணிகளுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு தலைவர்ஏஎம்.விக்கிரமராஜா வலியுறுத்தி உள்ளார். ஜவுளி ரகங்கள் மீதான 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை 12 விழுக்காடாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் கைத்தறி பட்டு ஜவுளி உற்பத்தி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் அழுத்தத்தின் காரணமாக வும், ஜவுளித் தொழில் உரி மையாளர்களின் எதிர்ப்பு குரல் காரணமாகவும், ஜிஎஸ்டி 46ஆவது கவுன்சில் கூட்டத்தில் ஜவுளித் துறைக் ்கான ஜிஎஸ்டி வரி உயர்வை ஒன்றிய அரசு தள்ளி வைத்தி ருப்பதை வரவேற்கிறோம்.
அதேசமயம், பிப்ரவரி மாத ஜிஎஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் இந்த வரி உயர்வு குறித்து, ஆய்வு செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று அறிவித்திருப்பது ஏற்புடையது அல்ல. அடித் ்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பயன்பாட்டிற்கான ஜவுளிப் பொருட்களின் மீதான வரி ஏற்றம் சரியல்ல. இந்த வரி ஏற்றத்தால் நெசவுத் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், பொது மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவதோடு, மக்களின் வாங்கும் திறனும் குறைந்து, தொழில் நசுக்கப் ்படும் நிலை உருவாகிவிடும்.
எனவே, ஜிஎஸ்டி வரி உயர்வை முழுமையாக தவிர்த்து அறிவிப்பு வெளி யிட வேண்டும். காலணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வை தவி ர்த்து அறிவிப்பு வெளி யிடாததுகாலணி தொழில் துறையினர், வணிகர்கள், பொதுமக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. ஜன.1 முதல் காலணிகளுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு நிச்சயம் தவிர்க் கப்பட வேண்டிய ஒன்றா கும். குறிப்பாக, அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் ஆயிரம் ரூபாய்க்கு குறை வான காலணிகளுக்கும் இந்த வரி உயர்வு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, காலணிகள் மீதான ஜிஎஸ்டி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.