tamilnadu

img

மாவட்டங்களில் ஜவுளிச் சந்தைகள் அமைக்க வேண்டும்! விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில மாநாடு வலியுறுத்தல்

இராஜபாளையம், ஜூன் 24- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் சிஐடியு தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் 4  ஆவது மாநில மாநாடு செவ்வாயன்று நடை பெற்றது. மாநில நிர்வாகி ரத்தினம் கொடி யேற்றி வைத்தார்.  சம்மேளன மாநிலத் தலைவர் முத்துச்சாமி தலைமையில், மாநில நிர்வாகி நாமக்கல் மோகன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில  நிர்வாகி விருதுநகரை சேர்ந்த ஆர்.சோம சுந்தரம் வரவேற்று பேசினார்.  மாநாட்டை சிஐடியு மாநில பொதுச் செய லாளர் ஜி. சுகுமாறன் துவக்கி வைத்து உரை யாற்றினார். சம்மேளன பொதுச் செயலாளர்  எம்.சந்திரன் வேலை அறிக்கையையும், வரவு-செலவு அறிக்கையை சம்மேளன பொரு ளாளர் எம்.அசோகனும் முன்வைத்தனர். பின்னர் குழு விவாதம் நடைபெற்றது. விவாதத் திற்கு தொகுப்புரையும் வழங்கப்பட்டது.  சிஐடியு மாநிலச் செயலாளர் பி.என். தேவா,  சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.மகா லட்சுமி, பஞ்சாலை சங்க மாநில பொதுச் செய லாளர் எம்.அசோகன் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர். கருமலையான் நிறைவுரையாற்றினார். வரவேற்பு  குழு தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.

 தீர்மானங்கள்

மாநாட்டில், மக்கள் பிரச்சனைகளை பின்னுக் குத் தள்ளி வகுப்புவாத இந்துத்துவா சக்தி களை அம்பலப்படுத்தி தொழிலாளர்கள் மத்தி யில் எடுத்துச் செல்லவும், விசைத்தறி தொழிலா ளர்களின் வாழ்வாதார அடிப்படையான கோரிக் கைகளை அமல்படுத்த வேண்டும். ஜவுளி தொழிலில் நெருக்கடி ஏற்படுவதற்கு காரண மான மின் கட்டண உயர்வை குறைக்க மாதந் தோறும் கணக்கிட வேண்டும். மாவட்டங்களில் ஜவுளிச் சந்தைகள் அமைக்க வேண்டும். ஜூலை 9 ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய  சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்.  விசைத்தறி தொழிலாளர்கள் உள்பட இதர தொழிலாளர்களின் மத்தியில் கந்துவட்டி கொடுமையால் நடக்கும் தற்கொலை பலி களை தடுத்து,  கந்துவட்டிக்கு எதிரான சட்டத்தை முறையாக அமல்படுத்தி மனித உயிர்களை பாதுகாக்க வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு, ஒன்றிய  அரசு ஜவுளிக்கழகம் மூலம் வழங்கிய இன்சூ ரன்ஸ் திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு நல வாரிய பயன்கள் தடையில்லாமல் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.  முன்னதாக தோழர் வேலுச்சாமி நினை வாக பள்ளிப்பாளையத்தில் இருந்து கொடி  எடுத்து வரப்பட்டது. முத்துக்குமார் தலைமை யில் எடுத்து வரப்பட்ட கொடியை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன் பெற்றுக்  கொண்டார். சங்கரன்கோவிலில் இருந்து தோழர் ஏ.மாடசாமி நினைவாக, சக்திவேல் தலைமையில் எடுத்து வரப்பட்ட கொடி மரத்தை சிஐடியு மாநிலச் செயலாளர் பி.என். தேவா பெற்றுக் கொண்டார். திருப்பூர் மாவட்டம் சீரானம்பாளை யத்திலிருந்து தோழர் பழனிச்சாமி நினை வாக வேலுச்சாமி தலைமையில் எடுத்துவரப்பட்ட  ஜோதியை, சிஐடியு மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி பெற்றுக் கொண்டார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து தோழர் காமராஜ் நினைவாக எடுத்து வரப்பட்ட ஜோதியை தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செய லாளர் சந்திரன் பெற்றுக் கொண்டார்.

நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் 23 பேர் கொண்ட புதிய மாநிலக் குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். மாநிலத் தலைவராக ஆர்.சோம சுந்தரம், மாநில பொதுச் செயலாளராக பி. முத்துச்சாமி, மாநிலப் பொருளாளராக எம். அசோகன், உதவி தலைவர்களாக கே.ரத்தி னம், பி.கே.பிருந்தாவனம், ஏ. செல்வம், எஸ்.ராமர்,  சி.சக்திவேல், கே.வீராசாமி, செயலாளர்களாக கே.மோகன், கே.வேலுச்சாமி, எஸ்.ஜோதி பாசு, ஆர்.வெங்கடேஷ், ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.