விருதுநகர் மாவட்டத்தில் தொழில் துறையில் பஞ்சாலை கைத்தறி கார்மெண்ட்ஸ் ஆகிய ஜவுளித் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் வட்டங்களில் பரவலாகவும் அருப்புக்கோட்டை, மல்லாங்கிணறு ஆகிய பகுதியில் ஓரளவு என நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாலை கள் உள்ளன. இதில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சத்திரப்பட்டி பகுதியில் உள்ள விசைத்தறிகளில் மருத்துவத் துணிகளும், இராஜபாளையம், திருவில்லி புத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள விசைத்தறிகளில் சேலை, வேஷ்டி ஆகிய ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. தளவாய்புரம் பகுதியில் பரவலாக ஆயத்த ஆடைகள் தயாராகின்றன. திருவில்லி புத்தூர், வத்ராப், இராஜபாளையம் பகுதியில் கைத்தறி சிறிதளவும் பெடல் தறிகள் அதிகமாகவும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 53 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் 14897 நெசவாளர்கள் நூல்களை வாங்கி வேலை செய்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பேருக்கும் மேல் ஈடுபடும் இந்த ஜவுளித் தொழில் ஒன்றிய மோடி அரசின் கொள்கைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் கார்ப்பரேட்டுகளுக்கு கதவைத் திறந்துவிடும் ஒன்றிய மோடி அரசு, ஜவு ளித்தொழிலையும் பன்னாட்டு கம்பெனிகள் ஆதிக்கம் செய்திடவும் வழிவகை செய்துள்ளது. நூல்களை பதுக்கி வைத்து செயற்கையான முறையில் இரண்டு மடங்கு விலைகளை உயர்த்திக் கொள்ளை லாபம் அடிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் தவறான ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளால் கடுமையாக நூல் விலை உயர்ந்துள்ளது. மிக அதிகமான ஜிஎஸ்டி வரி விதிப்பு, நூல் விலை உயர்வும் இத்தொழிலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற நெருக்கடிகளைக் காரணம் காட்டி பஞ்சாலை, விசைத்தறிகளின் உரிமையாளர்கள் இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான சம்பளம், பி.எப், இஎஸ்ஐ வசதிகள், பணிநிரந்தரம் எது வும் செய்வதில்லை. அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள் கைகளால் சிறு தொழில்கள் சீரழிகின்றன. இதனால் தொழி லாளர்கள் உரிமையும் பறிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில், ஊழல் மற்றும் முறைகேடுகளால் நஷ்டம் ஏற்பட்டு பல சங்கங்கள் மூடப்பட்டுள்ளன. சேத்தூர் மேட்டுப்பட்டி நெசவாளர் கூட்டுறவு சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் தலைமையில் இயங்குவதால் ஆண்டு தோறும் லாபம் ஈட்டுகிறது. கடந்த ஆண்டு மட்டு ரூ. 18,26,226 லாபம் கிடைத்துள்ளது. தொழிலைப் பாது காக்க, தொழிலாளர்கள் நலன் காக்க இடைவிடாது பாடு படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு மேலும் பல தீர்மானங்களை நிறைவேற்றிட உள்ளது.