சென்னை, டிச.21- தமிழகத்தைச் சேர்ந்த பள்ளிகளுக்கான பாடநூல்களை அச்சிடும் ஆர்டர்களை தமிழக அச்சகங்களுக்கே வழங்க உத்தர விட வேண்டும் என முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்ப் பள்ளிக ளில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான 8 கோடி புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்குகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் எடப்பாடி பழனி சாமி தலைமையிலான அதிமுக அரசு உலக ளாவிய டெண்டரை கொண்டு வந்ததை யடுத்து, அச்சிடும் ஆர்டர்களை தமிழக அச்சகத்தினர் இழக்கும் ஆபத்து ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வெளிமாநிலங்களின் அச்சகத்தாருக்கு 50 விழுக்காடும் தமிழக அச்சகத் தாருக்கு 50 விழுக்காடும் டெண்டர் வழங்கப் பட்டுள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் உள்ள புத்தகம் அச்சிடும் அச்சகங்கள் மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் புத்தகம் அச்சிடுவோர் சங்கமும் பைண்டர்ஸ் சங்கமும் அச்சம் தெரிவித்துள்ளன. ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள், பாடநூல்களை தங்கள் மாநிலத்திலேயே தான் அச்சடிக்கின்றன. பிற மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் வெளி மாநிலங்களுக்கும் தமிழக பாடப்புத்தகங் களை அச்சடிக்க அனுமதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 50 விழுக்காடு புத்தகங்களை அச்சிடும் டெண்டரின்படி, முதல் ஆர்டர் ஆந்திரா வுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் தமிழ கத்தைச் சேர்ந்த புத்தகம் அச்சிடுவோர் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, தமிழகத்தில் உள்ள பாடப் புத்தக அச்சகங்களின் கோரிக்கையின் நியா யத்தை ஏற்று, தமிழகத்தில் மட்டுமே பாட நூல்களை அச்சிடும் வகையில் தமிழக முதல்வர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.