தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் ஆய்வு
தஞ்சாவூர், ஜூன் 4 - தஞ்சாவூர் மாவட்டம், அரண்மனை வளாக சரஸ்வதி மகால் நூலகத்தில் மேற் கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர் தலைமையில், மாவட்ட ஆட்சி யர் மற்றும் சரஸ்வதி மகால் நூலக இயக்கு நர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், சரஸ்வதி மகால் நூலகத்தினை பார்வையிட்டு, நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்த கங்கள் குறித்தும், பதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அச்சகத்தின் மூலம் புத்த கங்கள் அச்சிடும் பணி நடை பெற்று வருவதையும், ஓலைச் சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளதையும், ஓலைச்சுவடிகள் பராமரிக்கப் பட்டு வருவதையும் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, சரஸ்வதி மகால் நூல கத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நூலகத்தில் வாசகர் பிரிவு, அருங்காட்சியகம், விற்பனை பிரிவு, சரஸ்வதி மகால் நூலக ஒளி, ஒலி காட்சி யகம் போன்ற பல்வேறு நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேலாண்மை இயக்குநர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலர் எஸ்.மார்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.