மதுரை, ஜூன் 27- காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்ரவதை யால் பாதிக்கப்பட்டோர்க்கான ஐ.நா.வின் சர்வதேச ஆதரவு நாள் கருத்தரங்கம் ஜூன் 26 அன்று மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், இயக்க செயற்பாட்டாளர்கள், காவல் துறை அதிகாரிகள், மனித உரிமைக் காப்பாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில், கூட்டியக்கத்தின் செயலர் மீ.த.பாண்டியன் பேசும் போது, சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல் மரணத்திற்குப் பின் அனைத்து அரசியல் கட்சிகள், 60க்கும் மேற்பட்ட இயக்கங்கள் அடங்கிய ‘‘காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம்’’ உருவாக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் விசா ரணை, கைது குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சை லேந்திர பாபு காவல்துறையினருக்கு சுற்றறிக்கை மூலம் வெளியிட்ட 41 வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய பதாகை வெளியிடப்பட்டது. இதை தமிழ்நாடு நான்காம் காவல் ஆணைய உறுப்பினர், மனோதத்துவ மருத்துவர் சி.இராமசுப்ரமணியன் வெளியிட, மதுரை மாவட்ட நில அப கரிப்பு பிரிவு ஆணையர் ஆனந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூமி நாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மருத்துவர் சி.இராமசுப்ரமணி யன் பேசும்போது, ‘‘நீதிபதிசெல்வம் தலைமையில் உள்ள தமிழ்நாடு நான்காம் காவல் ஆணையம் விரை வில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்க உறுப்பினர்களைச் சந்திக்க உள்ளது’’ என்று தெரிவித்தார். மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், சித்ரவதையால் பாதிக்கப் பட்டோர் ஆதரவு நாளின் முக்கியத் துவம் பற்றி கூறினார். உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஷாஜி செல்லன், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்துக் காவல்நிலையங்களி லும் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும் என்றார். மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா பேசும் போது, ‘‘இன்றைய இந்தியாவில் அரசின் தவறைச் சுட்டிக்காட்டுபவர் கள் அரச பயங்கரவாதத்தால், கொடுங்கோன்மையால் பாதிக்கப் படுகின்றனர். இந்தியாவில் வாழும் உரிமை கேள்விக்குறியாக உள்ளது.
அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர் 2014-ஆம் ஆண்டு ஆங்கில பத்திரிகை ஒன்றில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் குஜராத் கலவரம் பற்றிய உண்மைகளைப் பேசியவர்கள் மீதே பொய் வழக்குப் போடும் நிலையில், கலவரத்தில் சங்பரிவார்களின் பங்களிப்பை மிகத் தெளிவான ஆதாரங்களோடு திரட்டி பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் டீஸ்டா செதல்வாத்தின் நிலை, மோடி பிரதமரானால் என்ன ஆகும் என்று குறிப்பிட்டிருந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்னது தற்போது சித்திர வதைக்கு எதிரான ஐ.நா.வின் சர்வ தேச ஆதரவு நாளைக் கடைபிடிக்கும் போது நடைபெற்றுள்ளது. எனவே, காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பு தமிழக எல்லைகளைத் தாண்டி செயற்பட வேண்டிய தேவை உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.